தோனி, இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற இருக்கும் ஐசிசி உலக கோப்பை பின்னர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்யலாம் எனவே இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் இருக்கின்ற குறைவான நேரத்தில் 2011 உலகக் கோப்பை வென்ற கேப்டனிடம் நிறைய கற்றுக்கொண்டிருக்கிறார்.
“நான் அதை பற்றி அதிகம் யோசிக்கவில்லை ஏனெனில் நான் ஒரு வீரர், நான் அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள விரும்புகிறேன், அவர் (எம்.எஸ் தோனி) ஒரு லெஜண்ட் மற்றும் மக்கள் என்னை அவருடன் ஒப்பிட்டு பார்க்க விரும்பவில்லை. எல்லாவற்றையும் பற்றி அவரிடம் கேட்டு அறிந்துகொண்டு வருகிறேன், என்னுடைய ஆட்டத்தை நான் எப்படி முன்னேற்றுவிக்க முடியும் எனவும் அவரிடம் தெரிந்துகொள்கிறேன், ” என்று ரிஷப் பன்ட் கூறியுள்ளார்.
21 வயதான இடது கை பேட்ஸ்மேன் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சமீபத்தில் முடிந்த ஒரு நாள் சர்வதேச தொடரில் அனைவரையும் ஈர்க்க தவறினார்,இந்த தொடரில் இந்தியா 2-3 என தொடரை இழந்தது.
தோனி இல்லாத நிலையில் ஐந்து ஆட்டங்கள் கொண்ட தொடரில் கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளில் பண்ட் ஆடினார். உலகக்கோப்பை முன்னதாக நடந்த 50 ஓவர் தொடரில் இந்திய அணி இப்படி செய்திருப்பது, நிச்சயம் பாடத்தை புகட்டும்.
கடந்த இரண்டு ஒருநாள் போட்டிகளில் 36 மற்றும் 16 ரன்களை பண்ட் அடித்தார், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டு டி20 சர்வதேச போட்டிகளில் 3 மற்றும் 1 ரன்களை மட்டுமே எடுத்தார்.
தோனிக்கு அடுத்தபடியாக பண்ட் என்பதை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்துள்ளார்கள், அதே நேரம் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங், இளைய வீரரை வரவிருக்கும் உலக கோப்பை தொடரில் தோனிக்கு துணையாக இருப்பார் என்று ஆதரித்தார் .
“வரும் ஐபில் போட்டியில் அணிக்காக இரண்டு போட்டிகளை வென்று தந்தால் பண்ட் பற்றிய தவறான விமர்சனத்தை அனைவரும் மறந்துவிடுவார்கள், அவரை விட இந்திய வீரர்களின் இரண்டாவது விக்கெட் கீப்பராக வேறு யாரும் இருந்திட முடியாது,” என்று பாண்டிங் கூறியுள்ளார்.