தோனி ஒரு நல்ல கிரிக்கெட்டர் என்பதைத் தாண்டி அவரிடம் பல கவர்ந்திழுக்கும் குணாதிசயங்கள் உள்ளன என்பதுதான் அவருக்கு இவ்வளவு பெரிய ரசிகர் பட்டாளம் உலக அளவில் இருப்பதற்கு முக்கியக் காரணம். பொதுவாக எல்லோருக்கும் பல விஷயங்களில் ஆர்வமிருக்கும், ஆனால் அந்த ஆர்வங்களுக்காக நாம் எவ்வளவு கவனத்தையும், நேரத்தையும் செலவழிக்கிறோம் என்பதைப் பொறுத்தே ஒரு பன்முக ஆளுமையாக நாம் மாறுவதும் அமையும்
இந்திய ராணுவத்தில் அவருக்குக் கவுரவ லெஃப்டினென்ட் கர்னல் பதவி அளிக்கப்பட்ட பிறகு, கவுரவ பதவிகள் வழங்கப்படும் மற்ற பிரபலங்களைப் போல் அல்லாமல், ஒரு ராணுவ வீரன் எடுக்கும் பயிற்சிகளைத் தானும் எடுக்க வேண்டும் என ராணுவ முகாமில் தங்கி பயிற்சி எடுத்து வருகிறார் தோனி.
அதற்குக் காரணம் தோனிக்கு சிறிய வயதில் ராணுவ அதிகாரியாக ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. அது தாமதமாக நடந்திருந்தாலும் அதைப் பயன்படுத்தி கொண்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில், கிரிக்கெட் அகாடமி தொடங்க மகேந்திர சிங் தோனி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் கேப்டனான தோனி, ராணுவத் தில் கவுரவ லெப்டினன்ட் கர்னலாக இருக்கிறார். காஷ்மீரில், இந்திய ராணுவத்தின் பாராசூட் ரெஜிமெண்டில் வீரர்களுடன் இணைந்து பயிற்சி பெற அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது.
ராணுவப் பயிற்சி பெற இருப்பதால், வெஸ்ட் இண்டீஸ் தொட ருக்கான அணியில் இருந்து தன்னை விடுவிக்கும்படி, கேட்டுக்கொண்டிருந்தார்.
இதையடுத்து அவர், ராணுவத்தின் பாராசூட் ரெஜிமெண்டில் வீரர்களுடன் இணைந்து பயிற்சிப் பெற்றார். பின்னர் ‘விக்டர் படை’யுடன் இணைந்து காஷ்மீரில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார். வரும் 15 ஆம் தேதி வரை அவர் ரோந்து பணியில் ஈடுபட உள்ளார்.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் கிரிக்கெட் அகாடமி தொடங்க தோனி திட்டமிட்டுள்ளார். அங்குள்ள இளைஞர்களை ஊக்கு விக்க இந்த அகாடமியை தொடங்க இருப்பதாகவும் அங்கு இலவசமாக பயிற்சி அளிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் இது தொடர் பாக மத்திய விளையாட்டு அமைச்சகத்துடன் அவர் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.