தோனியின் நம்பிக்கை தான் நான் இந்த ஐபில்லில் சிறப்பாக செயல்பட காரணமாக உள்ளது என சிஎஸ்கே அணியின் முன்னணி வேக பந்துவீச்சாளர் தீபக் சஹார் கருத்து தெரிவித்துள்ளார். இவர் தற்போது இங்கிலாந்து செல்லும் இந்தியா ஏ அணியிலும் இடம் பெற்றுள்ளார்.
இரண்டு வருட தடைக்கு பிறகு மீண்டு வந்து சென்னை அணி 3 வது முறையாக கோப்பையை தட்டி சென்றது. அணியில் இடம் பெறுவாரா என சந்தேகத்தில் இருந்த தீபக் சஹார், துவக்க பந்துவீச்சாளராக பந்து வீசி ரன்களையும் கட்டு படுத்தினார். மேலும், முக்கிய விக்கெட்டுகளையும் எடுத்து கொடுத்தார்.
சில முக்கியமான சமயங்களில் நன்ற பேட்டிங் செய்தும் கொடுத்துள்ளார். இந்த ஆட்டத்தின் மூலமாக இந்திய ஏ அணிக்கும் தேர்வாகியுள்ளார். தற்போது இந்திய ஏ அணிக்காக இங்கிலாந்தில் ஆடி வருகிறார். இவரது இந்த செயல்பாட்டிற்க்கான காரணத்தையும் தற்போது கூறியுள்ளார்.
இவர் சென்னை அணிக்காக இந்த ஆண்டு ஐபில் போட்டியும், 15 போட்டிகள் ஆடி 10 விக்கெட்டுகளும் 50 ரன்களும் அடித்துள்ளார். 2017/18 ம் ஆண்டுக்கான ரஞ்சி போட்டியிலும் சிறப்பாக ஆடியுள்ளார். இதனால் தான் தற்போது இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நான் 2011 ம் ஆண்டு ரஞ்சி போட்டிகளில் நன்றாக ஆடியதால் அப்பொழுதே ஐபில் போட்டிகளில் இடம் பெற்றேன். ஆனால் ஐபில்லில் சிறப்பாக செயல்படாததால் அணியில் இடம் பெறவில்லை. காயங்கள் தான் எனக்கு நிறைய கற்றுக்கொடுத்தது. மீண்டும் அணியில் இடம்பெற இதுவே காரணமாக இருந்தது என தெரிவித்தார்.
மேலும் அவர், தோனி என் மீது வைத்த நம்பிக்கையே என்னை சிறப்பாக செயல்பட உதவியாக இருந்தது. என்னை எந்த விதத்திலும் கட்டுப்படுதவில்லை. எனது பாணியிலேயே செயல்பட சுதந்திரம் கொடுத்தார். அதுவே ரன்களை கட்டுப்படுத்தவும், விக்கெட்டுகள் எடுக்கவும் உதவியது என தெரிவித்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி குறித்து கேட்கையில், ட்ரெஸ்ஸிங் ரூமில் தோனி எங்களுடன் நிறைய நேரங்கள் செலவிடுவார். எங்களின் நிறை குறைகளை ஆராய்ந்து கருத்துகள் சொல்வார். மேலும், மிகவும் குதூகலமாகவும் சந்தோஷமாகவும் இருக்கும் மனநிலையை உருவாக்கி தருவார். இதுவே எங்களை சீசன் முழுக்க சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வெல்ல உதவியது என கூறினார்.