அஸ்வின் நல்ல விளையாடுகிறார், ஆனால் இவர் தான் பெஸ்ட் ; அதிரடியாக பேசிய ஆஷிஸ் நெஹ்ரா !!

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹரா அஸ்வின் மற்றும் ஜடேஜா குறித்து தனது கருத்தை பேசியுள்ளார்.


தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் முதலில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தென் ஆப்ரிக்காவின் செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 10 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் அடித்தது, இதில் இந்திய அணியின் தற்காலிக கேப்டனாக செயல்பட்டு வரும் கேஎல் ராகுல் சதம் அடித்து அசத்தினார், அவரை அடுத்து களமிறங்கிய எந்த ஒரு பயனும் சொல்லிக்கொள்ளும்படி சிறப்பாக செயல்படவில்லை இந்திய அணி மிகவும் இக்கட்டான நிலையில் இருக்கும் பொழுது இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவி அஸ்வின் 46 ரன்கள் அடித்து இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டெடுத்தார்.

தனது அபாரமான பேட்டிங் திறமையை வெளிப்படுத்திய அஸ்வினை பெரும்பாலான கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆஷிஷ் நெஹரா அஸ்வின் குறித்தும் ஜடேஜா குறித்தும் ஒப்பிட்டு பேசியுள்ளார்.

அதில் பேசிய அவர், “இந்திய அணியின் நட்சத்திர வீரர் அஸ்வின் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படுவார் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது, அவர் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்துள்ளார் என்பதை நம்மால் மறுக்க முடியாது, ஆனால் கடந்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளை நாம் பார்த்தால் அஸ்வினை விட பேட்டையில் ஜடேஜா தான் மிக சிறப்பாக விளையாடி உள்ளார், அதை அஸ்வினும் ஒருபோதும் மறுக்க மாட்டார். அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் ஒன்றாக விளையாடினால் பேட்டிங்கில் ஜடேஜா தான் சிறப்பாக செயல்படுவார் என்றும் ஆசிஸ் நெஹரா பேசியிருந்தார்.

Mohamed:

This website uses cookies.