தோனி இனி தேவையே இல்ல, இவர் போதும் ; முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் சொல்கிறார் !!

தோனி இனி தேவையே இல்ல, இவர் போதும் ; முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் சொல்கிறார்

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமான இந்தாண்டு மார்ச் 29 ஆம் தேதியில் துவங்கயிருந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையில் நாளை நடக்கவுள்ள பிசிசிஐ அதிகாரிகள் கூட்டத்தில் பேசி முடிவு எடுத்த பின் ஐபிஎல் தொடர் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் 2019 உலகக்கோப்பைக்கு பின் இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வந்த தோனி ஐபிஎல் தொடரில் களமிறங்க தயாராக இருந்தார். இந்திய கிரிக்கெட் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தோனி செயல்படும் விதத்தை பொறுத்தே அவருக்கு டி-20 கிரிக்கெட் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம் கிடைப்பது குறித்து தெரிவிக்க முடியும் என்றார்.

இந்நிலையில் இந்தாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ரத்தாகும் பட்சத்தில் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தோனிக்கு இடம் கிடைப்பது சந்தேகம் தான். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த், உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தோனி தேவையில்லை என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஸ்ரீகாந்த் கூறுகையில், “என்னைக்கேட்டால் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விக்கெட் கீப்பராக கே.எல் ராகுலை தேர்வு செய்யலாம்.

ரிஷப் பந்த் விக்கெட் கீப்பர் இடத்துக்கு இல்லை என்றாலும் திறமையான வீரர் அதனால் அவரை அணியில் சேர்த்துக்கொள்ளலாம். ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கவில்லை என்றால் தோனிக்கு உலகக்கோப்பை அணியில் வாய்ப்பு சந்தேகம் தான்.

கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ரிஷப் பந்த் காயமடைந்தார். அப்போது ராகுல் விக்கெட் கீப்பராக செயல்பட்டார். அந்த வாய்ப்பை ராகுல் சிறப்பாக பயன்படுத்திக்கொண்டார். மேலும் பந்த்தைவிட ராகுல் பேட்டிங்கிலும் எந்த இடத்தில் களமிறங்கினாலும் அதை சரியாக பயன்படுத்திகொள்கிறார்.

Mohamed:

This website uses cookies.