சூப்பர் ஹீரோ… இந்த பையன் இல்லேனா பெங்களூர் ஜெயிச்சிருக்க வாய்ப்பே இல்ல… அது டூபிளசிஸ், கோலி இல்லை; ஹர்பஜன் சிங் அதிரடி பேச்சு !!

சூப்பர் ஹீரோ… இந்த பையன் இல்லேனா பெங்களூர் ஜெயிச்சிருக்க வாய்ப்பே இல்ல… அது டூபிளசிஸ், கோலி இல்லை; ஹர்பஜன் சிங் அதிரடி பேச்சு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான பெங்களூர் அணியின் மிரட்டல் வெற்றிக்கு ராஜத் படித்தரும், யஸ் தயாலுமே மிக முக்கியமான காரணம் என முன்னாள் இந்திய வீரரான ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

பெங்களூர் அணியை அசால்டாக வீழ்த்தி வெற்றியுடன் தொடரை துவங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான மிக முக்கியமான போட்டியான தனது கடைசி போட்டியில் மீண்டும் பெங்களூர் அணியை எதிர்கொண்டது.

பெங்களூர் அணியுடனான முதல் போட்டி பேட்டிங், பந்துவீச்சு என அனைத்திலும் பெங்களூர் அணி மீது ஆதிக்கம் செலுத்தி அசால்டான வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடைசி போட்டியில் நேர் எதிராக செயல்பட்டது. பந்துவீச்சு, பேட்டிங் என அனைத்திலும் சொதப்பிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றியும் பெற முடியாமல், ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான ரன்னையும் எட்ட முடியாமல் தோல்வியை சந்தித்து, ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பையும் இழந்து வெளியேறியது.

வானிலை மாற்றத்தில் இருந்து ரன் ரேட் வரை அனைத்தும் தங்களுக்கு எதிராக இருந்த போதிலும், சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் வீரர்கள் நம்பிக்கையாக விளையாடிய விதமும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்திய விதமும் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்றுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான பெங்களூர் அணியின் மிரட்டல் வெற்றி கிரிக்கெட் வட்டாரத்தின் தற்போதைய ஹாட் டாப்பிக்காக இருப்பதால் முன்னாள், இந்நாள் வீரர்கள் என பலரும் பெங்களூர் அணியின் தரமான வெற்றி குறித்தான தங்களது கருத்துக்களை ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், பெங்களூர் – சென்னை இடையேயான போட்டி குறித்து பல்வேறு விசயங்கள் பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய கிரிக்கெட் வர்ணனையாளருமான ஹர்பஜன் சிங், பெங்களூர் அணியின் வெற்றிக்கு ராஜத் படித்தரும், யஸ் தயாலுமே முக்கியமான காரணம் என பாராட்டியுள்ளார்.

இது குறித்து ஹர்பஜன் சிங் பேசுகையில், “விராட் கோலி மற்றும் டூபிளசிஸ் ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டனர். மழையின் குறுக்கீடு காரணமாக ஆடுகளத்தின் தன்மை முற்றிலுமாக மாறியிருந்த நிலையிலும் இருவரும் விக்கெட்டை இழக்காமல் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். பெங்களூர் அணியின் இந்த வெற்றியை அவ்வளவு எளிதாக விவரித்துவிட முடியாது. என்னை பொறுத்தவரையில் மிடில் ஆர்டரில் களமிறங்கிய ராஜத் படித்தரின் அதிரடி பேட்டிங்கே போட்டியில் திருப்புமுனையாக அமைந்தது. கேமீரான் க்ரீனும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திவிட்டார். யஸ் தயால் பெங்களூர் அணியின் சூப்பர் ஹீரோவாக மாறிவிட்டார். கடைசி ஓவரில் தோனியின் விக்கெட்டை கைப்பற்றியதோடு, கடைசி ஓவரின் கடைசி 4 பந்துகளில் அவர் வெறும் 1 ரன் மட்டுமே விட்டு கொடுத்தது எனக்கு பெரும் ஆச்சரியத்தை கொடுத்தது” என்று தெரிவித்தார்.

Mohamed:

This website uses cookies.