‘பல குடும்பங்களை நாசமாக்கிவிட்டீர்கள்..’ ஜிம்பாப்வே வீரர் உருக்கமான ட்வீட்!!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசியின் ஆண்டு மாநாடு கூட்டம் லண்டனில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஐசிசி விதிகளை மீறி செயல்பட்ட ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியை இடைநீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.  உடனடியாக ஜிம்பாப்வே அணி மீதான தடை அமலுக்கு வருவதாக ஐசிசி தலைவர் ஷசாங் மனோகர் தெரிவித்துள்ளார்.

ஜிம்பாப்வே அணி நீக்கம் செய்யப்பட்டத்தை அடுத்து ஜிம்பாப்வே அணியின் வீரர் சிக்கந்தர் ரஸா, சர்வதேச கிரிக்கெட்டை இப்படியான விட்டு விலக எண்ணவில்லை என்று கூறியுள்ளார்.  ரஸா டிவிட்டரில் உருக்கமான செய்தியை பதிவு செய்துள்ளார். ” எப்படி ஒரு முடிவு அணியினரை அந்நியர்கள் ஆக்கியுள்ளது, எப்படி ஒரு முடிவு பலரை வேலையற்றவர்காள்ளாகியுள்ளது, எப்படி ஒரு முடிவு பல குடும்பங்களை பாதித்துள்ளது, எப்படி ஒரு முடிவு பலரின் வாழ்க்கையை சீரழத்துள்ளது, இப்படியாக நான் சர்வதேச போட்டிகளை விட்டு விலக நினைக்கவில்லை. @ICC” என்று பதிவிட்டார்.

 

 

“@ICC இது மனமுடையும் தீர்ப்பாக உள்ளது. எங்கள் தலைவர் எம்.பியாக இருப்பதை தவிர @ZimbabweSrc அணிக்கு எந்த அரசியல் பின்புலனும் இல்லை. நூற்றுக்கணக்காக நேர்மையான மக்கள், விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவியாளர்கள் எல்லோரும் தங்களுடைய பணிக்காக தங்களை அர்பணித்தார்கள்” என்று ஜிம்பாப்வே விக்கெட் கீப்பர் ப்ரெண்டன் டெய்லர் ட்விட் செய்தார்.

 

 

ஐசிசி கடந்த வியானன்று அரசியல் ஜிம்பாப்வே அணியில் அரசியல் தலையீடு இருப்பதாகக் கூறி, அந்த அணியை இடை நீக்கம் செய்தது.

ஐசிசி தலைவர் ஷசாங் மனோகர், “ஜிம்பாப்வே அணி கடுமையாக விதிகளை மீறியுள்ளது” என்று கூறியுள்ளார்.

“ஒரு வீரரை மட்டும் நீக்க நாங்கள் நினைக்கவில்லை, ஆனால், விளையாட்டு அரசியல் தலையீடு இல்லாமல் இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். ஜிம்பாப்வே அணி ஐசிசி விதியை மீறியிருப்பது தவறான செயலாகும். அதை முழுவதுமாக விசாரிக்காமல், ஜிம்பாப்வே அணியை ஆடவிட மாட்டோம். ஐசிசி விதிகளின் படி ஜிம்பாப்வேயில் கிரிக்கெட் தொடர வேண்டும் என்று ஐசிசி விரும்புகிறது” என்று மனோகர் தெரிவித்தார்.

And in the wake of the huge setback, Solomon Mire decided to hang his boots with immediate effect. The allrounder took to Instagram to confirm the news. Expressing his disappointment over the decision, Solomon Mire wrote:

இதை தவிர்த்து, பல முடிவுகள் இந்த ஐசிசியின் ஆண்டு மாநாடு கூட்டத்தில் எடுக்கப்பட்டது. இனி கிரிக்கெட்டில் தாமதாக பந்துவீசும் போது, கேப்டன் மீது மட்டும் நடவடிக்கை எடுக்காமல், அணி வீரர்களும் இதற்கு முழு பொறுப்பேற்க வேண்டும் என்று ஐசிசியின் புதிய விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Sathish Kumar:

This website uses cookies.