என்னயா நடக்குது இங்க, இதெல்லாம் நம்பவே முடியல; இந்திய அணியில் நடப்பதை பார்த்து கடுப்பில் பேட்டியளித்த பேட்டிங் கோச்!!

முதல் டெஸ்ட் போட்டியில் நடந்த இப்படி ஒரு விஷயம் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது என்று பேட்டி அளித்திருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் கோச் சஞ்சய் பாங்கர்.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடி வரும முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன் விராட் கோலி காயம் காரணமாக வெளியில் அமர்ந்து கொண்டார். இதனால் துணைக் கேப்டனாக இருந்த கேஎல் ராகுல், தற்காலிக கேப்டனாக பொறுப்பேற்றுக்கொண்டு விளையாடி வருகிறார்.

இந்திய அணிக்கு சாதகமான மைதானமாக பார்க்கப்படும் ஜோகென்னஸ்பர்க் மைதானத்தில் தடுமாற்றத்துடன் விளையாடி வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 202 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முதல் இன்னிங்சை விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 229 ரன்கள் எடுத்து, 27 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதனை அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வரும் இந்திய அணிக்கு துவக்கத்திலேயே 2 விக்கெட்டுகள் பறிபோயின. இதனால் தடுமாற்றத்துடன் காணப்பட்டது. சற்று மோசமான பார்மில் இருக்கும் அனுபவ வீரர்களான புஜாரா மற்றும் ரகானே இருவரும் களத்தில் நின்று இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர். இரண்டாம் நாள் முடிவில் இந்தியா 85 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் இடம்பெறவில்லை என்பது மிகப்பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது என பேட்டியளித்திருக்கிறார் சஞ்சய் பாங்கர். அவர் கூறுகையில்,

“டாஸ் போடுவதற்கு கேஎல் ராகுல் வெளியே வந்தபோது, அதை பார்த்த எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. இந்த போட்டிக்கு முன்னர் விராட் கோலி காயம் காரணமாக வெளியில் இருப்பார் என யார் நினைத்திருப்பார்?. ஏனெனில், இந்திய அணியில் மிகவும் பிட்டாக இருக்கக் கூடிய முதன்மை வீரர் விராட் கோலி. விராட் கோலி பேட்டிங்கில் சரிவர விளையாடவில்லை என்றாலும் அவர் அணியில் இல்லை என்றால் பெருத்த பின்னடைவாக இருக்கும். இதை பார்க்கும் பொழுது எனக்கு ஏமாற்றமாக அமைந்தது.

இந்திய அணி இந்த தொடரில் நல்ல நிலையில் இருக்கும் பொழுது, விராட் கோலி போன்ற வீரர் இடம் பெறவில்லை என்றால், எதிரணிக்கு கூடுதல் பலமாகவும் அமையலாம். இருப்பினும், கேஎல் ராகுல் இந்திய அணியை பேட்டிங்கில் வழிநடத்தி வரும் விதம் மிகவும் ஆரோக்கியமானதாக தெரிகிறது. கடந்த வருடத் துவக்கத்தில் இங்கிலாந்து அணியுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடிய அனுபவம், இங்கு அவருக்கு நன்றாக இருந்திருக்கும். அந்த பார்மை அப்படியே தென்னாப்பிரிக்க தொடரிலும் எடுத்துச்சென்று நன்றாக ஆடி வருகிறார். இந்த தொடரை இந்திய அணி நிச்சயம் வெல்லும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.” என்றார்.

Prabhu Soundar:

This website uses cookies.