கடந்த சில மாதங்களாக இந்தியாவே பேசிய ஒரு பிரபலமான விஷயங்களுள் ஓன்று இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவின் திருமணம். அதிலும் விராட் கோலி, நடந்துவரும் இலங்கை தொடரில் ஓய்வு எடுத்துக்கொண்டதும் இன்னும் அந்த எதிர்பார்ப்பு அதுகரித்தது. அதற்கேற்றார் போல் இருவரும் இத்தாலியில் திருமணம் செய்துகொள்ளப் போவதாக செய்திகல் வந்த வண்ணம் இருந்தது. ஆனால் இந்த செய்தியை இருவரும் மறுக்கவில்லை.
மேலும், அனுஷ்கா சர்மா தனது குடும்பம் மற்றும் ஜோதிடருடன் சில நாட்களுக்கு முன்னர் இத்தாலி சென்றார். இதனால் இந்த திருமணம் உறுதியாகிவிட்டது. பின்னர் இருவரும் இத்தாலியின் டாஸ்காணி கிராமத்தில் உள்ள ஒரு அழகிய ஹோட்டலில் நேற்று (டிச.11) திருமணம் நடைபெற்று முடிந்துவிட்டது என இரவு 8.50க்கு அறிவித்தனர்.
மேலும், இருவரும் ஒரே சேர தங்களது ட்விட்டர் பக்கத்தில் ஓர் மாதிரியான பதிவுகள் இட்டு கடைசி வரை ஒன்றாக இருப்போம் என உறுதியளித்தனர். ஆனால், திருமணம் மிக ரகசியமாக நெருங்கிய உறவினர்கள் மற்றும் விராட் கோலியின் பால்ய கால நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்ள அழைப்பு விடப்பட்டிருந்தது.
மேலும், கிரிக்கெட் உலகில் விராட் கோலியின் முன்னாள் பயிச்சியாளர் ராஜ்குமார் சர்மா கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருந்தர். முன்னதாக சச்சின் டெண்டுல்கர் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோருக்கு அழைப்பு விடப்பட்டதாக தெரிகிறது. ஆனால், அவர்கள் திருமணத்தில் இல்லை.
கிரிக்கெட் வீரர்களில் விராட் கோலியின் அண்டர்-17 கேப்டன், மற்றும் டெல்லி அணியில் விராட் கோலியின் மேட் கீத் வட்ஸ் கலந்துகொண்டார். தற்போது கீத் வட்ஸ் விராட் கோலியின் மேனேஜர் ஆவார். ஆகையால் கிரிக்கெட் வீரராக இவர் மட்டுமே கலந்து கொண்டார்.