உத்தரபிரதேசத்தில் உள்ள கிரேட்டர் நொய்டா என்னும் மாநிலத்தில் டெல்லியின் வேகப்பந்து வீச்சாளரான பர்விந்தர் அவானாவை தாக்கப்பட்டார்கள். 5 பேர் கொண்ட குழு அவரை தாக்கியதாக தகவல் வந்தது. தன் எதிரி கூட்டத்தில் ஒருவர் என அவானாவை போட்டு பொளந்து விட்டார்கள்.
இந்த சம்பவத்திற்கு பிறகு விசாரித்து வருகிறது போலீஸ்.
அந்த குழு பர்விந்தர் அவானாவை போட்டு பொளந்து விட்டதால், அவருக்கு அதிக காயம் ஏற்பட்டுள்ளது. முகத்தில் அவருக்கு பலத்த அடியும், அந்த சண்டையின் போது அவர் வாயில் இருந்து ரத்தம் வந்ததாக தகவல் வந்தது.
முதல் முறை அல்ல!
பர்விந்தர் அவானா ராசி இல்லாதவர் தான். இது போல் தேவையில்லாத பிரச்சனையில் அவர் ஈடுபடுவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பு மார்ச் 7, 2014-இல் போலீஸீடம் அடி வாங்கினார். அந்த போலீசிடம் வாக்குவாதம் செய்ததால், கோபமடைந்த போலீசார் அவானாவை அடித்து விட்டார்.
அவர் தான் கான்ஸ்டெபிள் பகத் சிங் யாதவ். போன் பேசுவதற்காக அவர் ஓரமாக காரை நிறுத்திவிட்டு போன் பேசியிருக்கிறார். ஆனால், அந்த போலீசார் அவரை அடித்ததால், அவரை இடைநீக்கம் செய்தார்கள்.
இதுவரை இந்திய அணிக்காக இரு சர்வதேச டி20 போட்டிகளில் பர்விந்தர் அவானா விளையாடியுள்ளார். உள்ளூர் போட்டிகளில் டெல்லி அணிக்காக விளையாடி வரும் அவர் 62 போட்டிகளில் விளையாடியுள்ளார். கிங்ஸ் XI புஞ்சாப் அணிக்காக அவர் சிறப்பாக விளையாடி இருக்கிறார்.