தனியார் நிறுவனத்தின் கையில் இந்திய கிரிக்கெட் அணியா…? பிசிசிஐ மீது வழக்குப்பதிவு!!

மத்திய அரசிடம் இருந்து எந்தவிதமான முறையான அங்கீகாரம் இன்றி நாட்டின் பிரதிநிதியாக உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் செயல்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு அமைப்பை (பிசிசிஐ) தடை செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த கீதா ராணி என்பவர் இந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, பிசிசிஐ அமைப்புக்கு எதிராகவும், அதன் அதிகாரிகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளார்.

டெல்லியைச் சேர்ந்த கீதா ராணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பிசிசிஐ என்பது தமிழகத்தில் சங்கப் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டம் 12-ன் பிரிவின்படி அதனால் அரசின் பிரதிநிதியாக செயல்பட முடியாது. பிசிசிஐ பதிவுசெய்யப்பட்ட நேரத்தில் நாட்டின் பிரதிநிதியாக வெளிநாடுகளில் போட்டிகளில் பங்கேற்க பதிவு செய்யப்பட்ட நேரத்தில் அரசிடமிருந்து எந்தவிதமான அங்கீகாரத்தையும் அனுமதியையும் பிசிசிஐ பெறவில்லை.

ஆனால், கிரிக்கெட்டை நிர்வகிக்கும் பொறுப்பு அமைப்பாக எந்தவிதமான தடையும் இல்லாமல் பிசிசிஐ செயல்பட்டு வருகிறது. மேலும், நாட்டின் பிரதிநிதியாகவும், கிரிக்கெட்டை நிர்வகிக்கும் அங்கீகாரம் பெற்ற அமைப்பாகும் பிசிசிஐ செயல்பட்டு வருகிறது.

பிசிசிஐ அமைப்பு எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் ஆங்கிலேயர்கள் காலணி ஆதிக்கத்தில் இருந்தபோது பயன்படுத்தப்பட்ட நட்சத்திரத்தை தனது லட்சினையாக பயன்படுத்திக் கொண்டு, அங்கீகாரம் இல்லாத நிலையில் இந்தியாவின் பிரதிநிதி என்று கூறிக்கொள்கிறது.

ஆங்கிலேயர்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்ட லட்சிணையை அரசின் அனுமதியில்லாமல் பிசிசிஐ பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். லட்சினை மற்றும் பெயர்சட்டம் 1950ன்படி, சட்டத்தை மீறியதாகும்

இந்தியா என்ற வார்த்தையை பயன்படுத்த பிசிசிஐ அமைப்புக்கு எந்தவிதமான சட்டப்பூர்வ அனுமதியும் இல்லை, வெளிநாடுகளில் இந்தியாவின் பிரதிநிதி அணியாக செயல்படவும் உரிமை இல்லை. இந்தியா என்பது இந்திய அரசுக்கு சொந்தமான பெயராகும்.

அதுமட்டுமல்லாமல் அரசு நிறுவனமான பிசிசிஐ மாற்றுவதற்கு தொடர்ந்து அதன் நிர்வாகிகள் மறுத்துவருகிறார்கள், சட்டப்பூர்வ தேசிய விளையாட்டு அமைப்பாக அறிவிக்கவும் எதிர்க்கிறார்கள். வீரர்கள் தேர்விலும் எந்தவிதமான வெளிப்படைத் தன்மையும் இல்லாமல், பாகுபாட்டுடனே வீரர்கள் தேர்வும் இருந்து வருகிறது.கிரிக்கெட் விளையாட்டை மத்திய விளையாட்டு அமைச்சகதத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் எம். சத்தியநாராயணா, பி. ராஜமாணிக்கம் ஆகியோர் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிசிசிஐ அமைப்பு, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி பதில் அளிக்க உத்தரவிட்டனர். வழக்கை 2019, பிப்ரவரி 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.வ்

Sathish Kumar:

This website uses cookies.