இந்தியா நியூசிலாந்து இடையேயான 3ஆவது மற்றும் தொடரின் கடைசி ஒருநாள் போட்டி நாளை துவங்குகிறது. இந்த போட்டி உத்திர பிரதேச மாநிலத்தின் கான்பூரில் நாளை மதியம் 1.30க்கு துவங்குகிறது.
நேற்று முன் தினம் கான்பூரை அடைந்த நியூசிலாந்து மற்றும் இந்திய வீரர்களுக்கு உத்திர பிரதேசம் சார்பில் காவி துண்டுகள் மூலம் வரவேற்பு கொடுக்கப்பட்டது. இது சற்று சமூக வலை தளங்களில் விமர்சனங்களுக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.
இரு அணிகளும் முதல் இரண்டு போட்டிகளில் தலா ஒரு போட்டியை வென்று தொடர் 1-1 என்ற நிலையில் உள்ளது. நாளை நடைபெரும் மூன்றாவது போட்டியில் வெற்றிபெறும் அணி கோப்பையைக் கைப்பற்றும்.
தற்போது நாளை நடைபெறும் போட்டிக்கான சிறந்த 11 பேர் கொண்ட இந்திய அணியைப் பார்ப்போம்.
1.சிகர் தவான்
துவக்க ஆட்டக்காரராக இலங்கை ஒருநாள் தொடரில் சில போட்டிகள் விளையாட முடியாமல் போனது. பின்னர் ஆஸ்திரேலியத் தொடரிலும் குடும்ப சூல்நிலைகாரணமாக சில போட்டிகள் விளையாட முடியாமல் போனது. தற்போது நியூசிலாந்து அணியுடான தொடரின் முதல் போட்டியில் சோபிக்கத்தவறினார் சிகர்.
2.ரோகித் சர்மா
சற்று நிதானமாக ஆடத் துவங்கும் ரோகித், இரண்டு போட்டிகளிலும் சொதப்பினார். இந்த மூன்றாவது போட்டியில் அவரது அதிரடியால் இந்திய அணிக்கு வெற்றிக்கு வழிவகுப்பார் என நம்புவோம்.
3,விராட் கோலி
தொடரின் முதல் போட்டியில் அற்புதமாக ஆடி தனது 31 சதத்தை பூர்த்தி செய்த கேப்டன் கோலி.
4,தினேஷ் கார்த்திக்
ஒரு வருடமாக இந்தியாவின் மிடில் ஆடர் பிரச்சனைக்கு தற்போது தீர்வு கட்டத்தட்ட கிடைத்துவிட்டது போல் உள்ளது. மனீஷ் பாண்டே, கே.எல்.ராகுல், கேதார் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, தோனி என அடுத்தடுத்து இந்த இடத்திற்கு பல்வேறு வீரர்களை முயற்சி செய்தார் கோலி. தொடர்ந்து எவராலும் சரியாக இந்த இடத்தை பூர்த்தி செய்யத் தவறினர்.
இரண்டாவது போட்டியில் நெ.4ல் இறங்கிய கார்த்திக் நன்றாக ஆடி 92 பந்துகளுக்கு 64 ரன் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார்.
5.கேதார் ஜாதவ்
எப்படியும் அதிரடியாக நல்ல துவக்கம் கொடுத்துவிடுகிறார் கேதார் ஜாதவ், 20 அல்லது 30 ரன் நன்றாக ஆடி பின்னர் விக்கெட்டை இழந்து விடுகிறார். பந்து வீச்சில் இரண்டாவது போட்டியில் 10 ஓவருக்கு 31 ரன் மட்டுமே கொடுத்து நியூசிலாந்து அணியை 230 ரன்னிற்குள் கட்டுப்படுத்த உதவினார்.
6.ஹர்திக் பாண்டியா
இந்த ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியாவின் பங்கு முக்கியமாக இருக்கப் போகிறது. இரு அணிக்கும் உள்ள வித்யாசம் தான் ஹர்திக் பாண்டியா, இந்த போட்டியின் இவரது இயல்பானா பந்து வீச்சு மற்றும் அதிரடி ஆட்டத்தை காட்டும் பட்ச்சத்தில் இந்திய அணிக்கு தொடரை வென்று கொடுக்க முடியும்.
7.எம்.எஸ்.தோனி
ஒவ்வொரு தொடருக்கும் ஒன்று அல்லது இரண்டு தோனியின் அந்த ஸ்பெசல் இன்னிங்சை பார்த்து வந்தோம், இந்த தொடரில் இன்னும் அந்த வாய்ப்பை தோனிக்கு வீரர்கள் அளிக்கவில்லை. இந்த ஆட்டத்தில் ஆடும் பட்சத்தில் அணிக்கு ஒரு தொடரை வென்று தந்த பெருமை அவரை சேரும்.
8.புவனேஷ்வர் குமார்
முதல் போட்டியில் புவனேஷ்வர் குமார் அடித்த இரண்டு சிக்சர்கள் விராட் கோலியை கவர்ந்து விட்டது. தோனிக்கு முன்பு புவனேஷ்வரை கோலி இறக்கி விட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. பந்து வீச்சலும் அற்புதமாக செயல்பட்டு இரண்டாவது போட்டியில் ஆட்டநாயகன் விருதை பெற்றார் புவனேஷ்வர்.
9.அக்சர் படேல்
நன்றாக சுழல் பந்து வீசுகிறர, அவரது உயரம் சற்று அதிகம் பந்தை எழும்ப வைக்கிறது. ஆர்மர் அற்புதமாக வீசுகிறார்.
ஆல் ரவுண்டரான இவர் பேட்டிங்கில் இன்னும் சோபிக்கவில்லை. பேட்டிங்கில் சற்று கைகொடுக்கும் பட்சத்தில் அணியில் நிரந்தர இடம் பிடிக்கலாம்.
10.யுஜவேந்திர சகால்
அவரது ரிஸ்ட் தான் அவரது பலம். அடுத்தடுத்த தொடர்களின் எதிரணியில் இருக்கும் அதிரடி வீரர் மற்றும் பிக் ஹிட்டர்களை குறி வைக்கிறார் சகால். இந்த இறுதிப் போட்டியில் இவரது பங்கு முகியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
11.ஜஸ்பிரிட் பும்ரா
தனது பந்து வீச்சின் முக்கியத்துவத்தை உணர்ந்து அச்சு பிசராமல் தனது வேலையை செய்து வருகிறார் பும்ரா.
ஆட்டத்தின் இறுதியில் ஒரு ஓவருக்கு 5 ரன்னைக் கட்டுப்படுத்த வேண்டும் எனறாலும் பும்ராவிடம் நம்பி பந்தை கொடுக்கலாம் அந்த அளவிற்கு அற்புதமாக டெத் பௌலிங் செய்கிறார் பும்ரா.