பிப்ரவரி 3, 2018, இந்த நாள் அனைத்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் நியாபகம் வைத்து கொள்ள வேண்டிய நாள் என்றும் சொல்லலாம். நியூஸிலாந்தில் நடந்த U19 கிரிக்கெட் உலக கோப்பையின் இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி நான்காவது முறை U19 உலக கோப்பையை வென்றது இந்திய அணி. 18 வயதான ப்ரித்வி ஷா கோப்பையை வென்றதும் அவரது சந்தோசத்தை வெளிப்படுத்தினார்.
இது வரை இந்திய அணிக்காக U19 உலகக்கோப்பை வென்ற கேப்டன்கள் பட்டியலில் முகமது கைப், விராட் கோலி மற்றும் உன்முக்த் சந்துடன் சேர்ந்தார் ப்ரித்வி ஷா. இந்த உலகக்கோப்பை முழுவதும் ஒரே போட்டியில் கூட தோல்வி பெறாத இந்திய அணி, எதிரணிகளை துவம்சம் செய்தது.
இந்த உலகக்கோப்பையை ஆஸ்திரேலிய அணியிடம் இருந்து தொடங்கிய இந்திய அணி, அடுத்தடுத்து PNG மற்றும் ஜிம்பாப்வே போன்ற அணிகளை வறுத்தெடுத்தது. இதனால், மற்ற விதமான கிரிக்கெட் போட்டிகளை விட்டுவிட்டு U19 உலகக்கோப்பையை பார்க்க தொடங்கினார்கள் ரசிகர்கள்.
ஜூனியர் இந்திய அணி காலிறுதி போட்டியில் போட்டியில் வங்கதேச அணியை 131 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. பாகிஸ்தான் அணியுடன் அரையிறுதி போட்டியில் மோதிய இந்திய அணி பாரபட்சம் பார்க்காமல் பாகிஸ்தான் அணியை புரட்டி போட்டது.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் கமலேஷ் நாகர்கோடி, இஷான் போரேல் மற்றும் சிவம் மாவி ஆகியோர் சிறப்பாக பந்துவீச்சினார்கள். சுழற்பந்து வீச்சாளர்களான சிவம் சிங்,அங்குள் ராய் மற்றும் ரிஷி பராக் ஆகியோர் அற்புதமாக பந்து வீசி தேவையான சமயத்தில் விக்கெட் எடுத்து தந்தார்கள்.
பேட்டிங் தரப்பில் ப்ரித்வி ஷா, ஷுப்மன் கில் மற்றும் மஞ்சோட் கல்ரா ஆகியோர் பொளந்து கட்டினார்கள். அதுமட்டும் இல்லாமல், இளம் வீரர்கள் பீல்டிங்கிலும் தீவிரமாக செயல் பட்டதால் கோப்பையை வென்று அசத்தினார்கள்.
“உங்களது ஆதரவுக்கு மிக்க நன்றி. விரைவில் இந்தியாவிற்கு வந்து இந்த கோப்பையை உங்களிடம் ஒப்படைகிறோம்,” என இந்திய அணியின் கேப்டன் ப்ரித்வி ஷா கூறினார்.
அந்த வீடியோவை பாருங்கள்: