தனது தனிப்பட்ட வாழ்க்கையை மற்றவர்கள் கண்காணிப்பது, இடையூறாக இருப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி வருத்தம் தெரிவித்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவை காதலித்து வந்த அவர், கடந்த டிசம்பர் மாதம் மணம் முடித்துக் கொண்டார். இந்நிலையில், தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பிறர் கண்காணிப்பதும், வேடிக்கை பார்ப்பதும் தனக்கு இடையூறாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
எனினும் இவற்றை எப்படி எதிர்கொள்வது என தான் கற்றுக் கொண்டுவிட்டதாகவும் விராத் கோலி தெரிவித்துள்ளார். பிரபலங்களும் சாதாரண மனிதர்களைப் போன்றவர்கள்தான் என்பதை, பொதுமக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் கோலி கேட்டுக் கொண்டுள்ளார்.
தனக்கு திருமண வாழ்த்து தெரிவித்த அனுஷ்கா சர்மாவிடம், தனது திருமணத்தில் விராத்-அனுஷ்கா இருவரையும் மிஸ் செய்ததாக நடிகை சோனம் கபூர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், திருமணத்திற்கு அழைக்கப்பட்ட விராத்-அனுஷ்கா ஜோடி இருவரும், தங்கள் வேலைகளில் பிசியாக இருந்ததால், திருமணத்தில் பங்கேற்க முடியாமல் போனது. இதைத் தொடர்ந்து, விராத் கோலியின் மனைவி அனுஷ்கா, புதுமணத் தம்பதியை வாழ்த்தி டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.