சொல்றத ஒழுங்கா செய்ங்க! சென்னை மக்களை கடுமையாக எச்சரித்த ரவி அஸ்வின்!

உலகம் முழுவதும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 6,500 ஆகியுள்ளது. கொரோனா வைரஸால் இதுவரை ஒரு லட்சத்து 69 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரத்தில் 76 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய சீனாவில் 80,858 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,213 ஆக அதிகரித்துள்ளது. சீனாவைத் தொடர்ந்து, ஐரோப்பாவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது கொரோனா.

இத்தாலியில், நேற்று ஒரு நாளில் மட்டும் 3,590 பேருக்கு தொற்று ஏற்பட்ட நிலையில், மொத்தமாக 24,747 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,809 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினில் 7,845 பேரும், ஜெர்மனியில் 5,813 பேரும் கொரனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையை சென்னை மக்கள் கடைபிடிக்க தவறுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் வேதனை தெரிவித்துள்ளார்.‌ அவர் தனது ட்விட்டர்‌ பதிவில், மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்குமாறு கூறப்பட்டதை சென்னை மக்கள் க‌வனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ளார்‌.

சென்னையில் நிலவும் கடுமையான வெப்பநிலையால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருக்கும் எ‌ன மக்கள் நினைத்திருக்கலாம் எனவும் அல்லது தங்களை எதுவும் தாக்‌காது என நம்பிக்கை கொண்டிருக்கலாம் எனவும் அஷ்வின் கூறியுள்ளார்‌.

 

ஒவ்வொரு நாட்டிலும் நாள் ஒன்றுக்கு 100 க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பல ஆசிய நாடுகள் (நீல கோடுகளால் குறிக்கப்படுகின்ற கொரோனா தாக்குதலை  கொண்டுள்ளன, ஐரோப்பா (மஞ்சள் கோடுகள்), அமெரிக்கா (சிவப்பு கோடுகள்) மற்றும் மேற்கு ஆசியா (பச்சை கோடுகள்) ஆகியவை கொரோனா பாதிப்புகளில்  அதிவேக உயர்வைக் காண்கின்றன.
ஹாங்காங், தென் கொரியா மற்றும் தைவான் ஆகிய நாடுகளில்  சோதனை விகிதங்களை குறைந்து காணப்பட்டதால்  அங்கு நோய்  பரவல் அதிக அளவில் உள்ளது.  அதேசமயம் அமெரிக்கா  மற்றும் இங்கிலாந்து அவ்வாறு செய்யவில்லை மற்றும் அதனால் அங்கு நோய் பாதிப்பு அதிவேக உயர்வைக் கண்டன. இந்தியாவும் சோதனை விகிதத்தை குறைக்கவில்லை.
இந்தியாவில், சோதனை விகிதங்கள் மிகக் குறைவானவையாக இருந்தாலும்   ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி நோய் பரவுவதில் எந்தவிதமான  அதிகரிப்பையும் காட்ட வில்லை. ஆனால் இதேபோன்ற சோதனை விகிதங்களைக் கொண்ட மேற்கத்திய நாடுகளில் நோய் பாதிப்பின்  அதிவேக உயர்வு எச்சரிக்கையை  கொடுக்கின்றன.

Sathish Kumar:

This website uses cookies.