3ஆவது போட்டி , மழை பாதிப்பு

இந்தியா-ஆஸ்திரேலிய இடையிளான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. தற்போது அந்த போட்டிக்கு குறுக்கீடாக மழை வர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

முறையே சென்னை மற்றும் கொலகத்தாவில் நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளுக்கு முன்னரும் இப்படித்தான் போட்டு துவங்கும் முன் மழை  குறுக்கிட வாய்ப்பு இருந்தது.

ஆனால், முதல் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ் துவங்கும் முன் ஆட்டம் தடைபட்டு பின்னர் டி.எல்.எஸ் முறையில் போட்டி நடந்தது. பின்னர் இந்திய அணி டி.எல்.எஸ் முறையில் 26 ரன் வித்யாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

மூன்றாவது போட்டி நடக்கவுள்ள மைதானத்தின் ஆடுகள பராமரிப்பாளர், சமந்தர் சிங் சவுகன் கூறியதாவது

தற்போது ஆடுகள் அலுவலர்கள் தற்போது மழை பெய்து வருவதால் மைதானத்தை கவர் வைத்து மூடி வைக்க பாடுபட்டு வருகின்ற்னர்.

Indian groundstaff cover the pitch after rain stopped play in the first one day international (ODI) cricket match in the India-Australia series at the M A Chidhambaram stadium in Chennai on September 17, 2017. / AFP PHOTO / ARUN SANKAR / —-IMAGE RESTRICTED TO EDITORIAL USE – STRICTLY NO COMMERCIAL USE—– / GETTYOUT

மைதானத்திய தயார் படுத்துவது தற்போது மிகபெரிய சவாலாக உள்ளது. மைதானம் முழுமையும் தற்போது கவர் செய்யப்பட்டுள்ளது. மைதானத்தை தண்ணீர் இல்லாமல் பாதுகாக்க மிகவும் சிரமப்பட்டு வருகிறோம்.

தற்போது, வானிலை ஆய்வௌ மையத்துடன் இணைப்பில் உள்ளோம் சனி மற்றும் போட்டி நடக்கும் நாளன்று மேகங்கள் சூழவுள்ளதாகத் தெரிகிறது.

சென்ற வருடன் நடந்த டெஸ்ட் போட்டியின் போது மழை பெய்தது. அக்டோபர் 6 மற்றும் 7 ஆம் தேதி நடந்த டெஸ்ட் போட்டியில் மழை பெய்தது

எனக் கூறினார்.

தற்போது இந்திய் அணி இந்தூர் மைதானத்தில் நடக்கும் போட்டியையும் வென்று தொடரை வெல்ல முனைப்பாக களம் இறங்கும்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. சென்னையில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 252 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. கடைசி 15 ஓவர்களில் இந்திய பேட்ஸ்மேன்கள் வெறும் 67 ரன்கள் மட்டுமே எடுத்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் நாதன் கவுல்டர்-நிலே, கனே ரிச்சர்ட்சன் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

ஆஸ்திரேலிய அணி 43.1 ஓவர்களில் 202 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. புவனேஷ்வர்குமார், குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 3-வது ஒரு நாள் போட்டி வருகிற 24-ந்தேதி இந்தூரில் நடக்கிறது.

Editor:

This website uses cookies.