இந்திய அணியின் இளம் லெக் ஸ்பின்னர் ரவி பிஷ்னாய் தனது பந்துவீச்சில் இன்னும் சில மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என்று பாகிஸ்தான் அணி முன்னாள் வீரர் டானிஷ் கெனரியா தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக, 21வயதாகும் இளம் லெக் ஸ்பின்னர் ரவி பிஷ்னாய்க்கு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி வாய்ப்பளித்தது.
இதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட பிஷ்னாய், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில்,4 ஓவர்கள் வீசி 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார், இதில் ஆச்சரியம் என்னவென்றால் இவர் வீசிய 24 பந்துகளில் 22 பந்துகள் கூகுலி வேரியேசன் தான், (இதில் 16 பந்துகளை டாட் பாலாக வீசினார்.மேலும் அதில் 6அகல பந்துகளும் வீசினார்).
முதல் போட்டியிலேயே சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக அடுத்தடுத்த போட்டிகளில் இந்திய அணி இவருக்கு வாய்ப்பளித்தது,இதனால் பிஷ்னாய் இதுவரை இந்திய அணிக்காக 4 டி20 போட்டிகளில் பங்கேற்று விளையாடி உள்ளார்.இதில் இவருடைய எகானமி 6.75.
இதன் காரணமாக இளம் வீரர் ரவி பிஷ்னாயை, பெரும்பாலான கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் பாராட்டி வருகின்றனர். மேலும் இவருடைய எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக இவருடைய நிறை,குறை குறித்து அறிவுரையும் வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் டானிஷ் கெனரியா இந்திய அணியின் இளம் வீரர் ரவி பிஷ்னாய் தனது பந்துவீச்சில் இன்னும் கூடுதல் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று அறிவுரை கொடுத்துள்ளார்.
அதில், ரவி பிஷ்னாய் திறமையான வீரராக காணப்படுகிறார், இவருடைய திறமையை இந்திய அணி பயன்படுத்திய முறை கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக உள்ளது, இவருடைய கூகுளி மற்றும் பிளிப்பர் வேரியேசன் நன்றாக உள்ளது.இருந்தாலும் ஐபிஎல் தொடர் மற்றும் மற்ற தொடர்களை விட சர்வதேச கிரிக்கெட் தொடர் வித்தியாசமான ஒன்று. இதில் இளம் வீரர் ரவி பிஷ்னாய் வெற்றிகரமாக பயணிக்க வேண்டும் என்றால்,தனது வேரியேசன்களில் இவர் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். ரவி பிஷனாய் புத்திசாலியான ஒரு வீரர்,இவருடைய பீல்டிங் அருமையாக உள்ளது,ஆனால் இவருக்கு இதை விட மிக முக்கியம் தன்னுடைய பந்துவீச்சு தான், என்று டானிஷ் கெனரிய அறிவுரை வழங்கியுள்ளார்.