இதே தவறை மீண்டும் மீண்டும் செய்தால் இந்திய அணி கவலைக்கிடமாக போயிரும்; அறிவுரை வழங்கிய ரவி சாஸ்திரி !!

இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி இன்னும் கூடிய விரைவில் இந்திய அணி இதே தவறை மீண்டும் செய்தால் மிகப் பெரும் நெருக்கடியை சந்திக்கும் என்று பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

உலக கிரிக்கெட் தொடரில் பலம் வாய்ந்த அணியாக வலம்வரும் இந்திய அணி வெளிநாட்டு மைதானங்களில் சென்று மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்று வருகிறது,இதற்கு முக்கிய காரணம் இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள் என்று கூறலாம். அந்த அளவிற்கு இந்திய அணியின் பலம்வாய்ந்த பந்துவீச்சு இந்திய அணியின் வெற்றிக்கு மிகவும் உதவிகரமாக இருந்து வருகிறது.

இந்திய அணியில் தற்பொழுது அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்களாக முகமது சமி, புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, இஷாந்த் ஷர்மா மற்றும் ஆகிய வீரர்கள் உள்ளனர்.

இவர்களை விட்டால் இந்திய அணிக்காக சிறப்பாக செயல்படும் வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய அணியில் தற்பொழுது இல்லை, இதற்கு முக்கிய காரணமாக இந்திய அணி நிர்வாகம் அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்களை இளம் வேகப்பந்து வீச்சாளர்களுடன் இணைத்து விளையாட வைப்பதில்லை.

இதுபோன்று ஏற்கனவே இலங்கை அணி அவதிப்பட்டு வந்ததை நாம் கண்கூடாக பார்த்தோம், எந்த ஒரு அணியும் அஞ்சி நடுங்கும் வகையில் இலங்கை அணி மிகப் பெரும் பலம் வாய்ந்த அணியாக வலம் வந்தது, ஆனால் இலங்கை அணியில் இளம் வீரர்களுக்கு போதிய வாய்ப்பு கிடைக்காததால், சீனியர் வீரர்கள் ஓய்வு பெற்ற பின் இலங்கை அணியின் நிலைமை தற்பொழுது மிகவும் பரிதாபமாக இருக்கிறது. இதே போன்ற நிலைமை இந்திய அணியில் நடக்காமல் இருக்க வேண்டும் என்றால் இந்திய அணி உடனடியாக தெளிவான ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்று பெரும்பாலான கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இந்திய அணி குறித்து பேசியுள்ளார்.

அதில்,”தற்பொழுது இந்திய அணியில் 23 வயது இருக்கும் 5 சிறந்த பந்துவீச்சாளர்களை கண்டுபிடிப்பது என்பது மிகப்பெரும் கடினமான விஷயம், இந்தியாவில் பந்து வீச வேண்டும் என்பது மிகவும் எளிதான விஷயம் ஆனால் வெளிநாட்டு மைதானங்களில் வீசுவது குறித்து நான் பேசுகிறேன், தற்பொழுது சில ஆண்டுகளுக்கு இந்திய அணியில் எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது போதுமான பந்துவீச்சாளர்கள் உள்ளனர், ஆனால் வெகு விரைவில் இந்திய அணி இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களை மேம்படுத்த வேண்டும், அப்பொழுதுதான் இந்திய அணியின் இளம் வீரர்கள் வெளிநாட்டு மைதானங்களில் மிக சிறப்பாக செயல்படுவார்கள்” என்று ரவி சாஸ்திரி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.