டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சோதப்பியபோது, தனி ஆளாக போராடிய திலக் வர்மா மும்பை அணியை
பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் ஐந்தாவது லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோகித் சர்மா மற்றும் இசான் கிஷன் இருவரும் ஓபனிங் செய்தனர். அபாரமாக பந்துவீசி வந்த சிராஜ், இஷான் கிசன்(10) விக்கெட்டை வீழ்த்தினார். பின்னர் ரோகித் சர்மா கொடுத்த கேட்சை, தினேஷ் கார்த்திக் மீது மோதி கோட்டைவிட்டார்.
கேமரூன் கிரீன் 5 ரன்கள், சூரியகுமார் யாதவ் 15 ரன்கள் அடித்து வெளியேற, மும்பை இந்தியன்ஸ் அணி 48 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது மும்பை அணி.
அப்போது உள்ளே வந்த திலக் வர்மா ஆரம்பம் முதலே ஒரு பக்கம் நின்றுகொண்டு அதிரடியாக விளையாடி, தனி ஆளாக போராடினார். திலக் வர்மாவுடன் நன்றாக பாட்னர்ஷிப் அமைத்து விளையாடி வந்த நேகல் வதேரா, 21 ரன்களுக்கு அவுட் ஆனார். பின் வந்த டிம் டேவிட் 4 ரன்கள், ஹ்ரித்திக் ஷோகீன் 5 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மும்பை அணி மீண்டும் தடுமாற்றம் கண்டது.
இருப்பினும் நிறுத்தாமல் பவுண்டரி சிக்ஸர்களாக அடித்த திலக் வர்மா, மும்பை அணியின் ஸ்கொரை 150 ரன்களுக்கும் மேல் கொண்டு சென்றார்.
பின்னர் கடைசி 2 ஓவர்களில் 16 ரன்கள் மற்றும் 22 ரன்கள் முறையே அடித்து, 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணியின் ஸ்கொரை 171 ஆக மாற்றினார். இன்னிங்ஸ் முடிவில் மும்பை 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
இறுதிவரை அவுட்டாகாமல் ஒற்றை ஆளாக போராடிய திலக் வர்மா 9 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் உட்பட 46 பந்துகளில் 84 ரன்கள் விளாசினார்.