உச்சக்கட்ட பேட்டிங் ஃபார்மில் இருக்கும் ஹர்திக் பாண்டியா டெஸ்ட் அணியில் இல்லாதது ஏன் ? உண்மையான காரணம் இதுதான் !
ஹர்திக் பாண்டியா ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் இந்திய அணிக்காக மிகச் சிறப்பாக விளையாடி பட்டையைக் கிளப்பிவிட்டார். கிட்டத்தட்ட இந்திய அணி 3 போட்டிகளில் வென்று இருக்கிறது. இந்த மூன்று போட்டிகளிலுமே ஹர்திக் பாண்டியா அணிக்காக பெரிதும் உழைத்தார்.
இரண்டு போட்டிகளில் தன்னந்தனி ஆளாக நின்று வெற்றி பெற்று கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்படிப்பட்ட ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஹர்திக் பாண்டியா டெஸ்ட் தொடரில் கண்டிப்பாக இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டெஸ்ட் தொடரில் அவரது பெயர் தற்போது வரை இடம்பெறவில்லை.
இந்நிலையில் ஏன் அவர் எதிர்பார்க்கப்பட்ட படி டெஸ்ட் அணியில் இல்லை என்று விராட் கோலி சூசகமாக தெரிவித்திருக்கிறார். அவர் கூறுகையில் ஹர்திக் பாண்டியாவால் தற்போது பந்துவீச முடியவில்லை. அவரால் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியும். ஆனால் அவர் பந்து வீச முடியாத போது அவருக்கு வாய்ப்புகள் சற்று குறைவாகத்தான் இருக்கும்.
ஏனெனில் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற அந்நிய மண்ணில் விளையாடும்போது இத்தனை ஆண்டுகாலம் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு ஆகிய இரண்டையுமே செய்து அணியில் இரண்டு வீரருக்கான வேலையை செய்து கொண்டிருந்தார்.
மேலும் அவர் இருக்கும்போது 5 பந்துவீச்சாளர்கள் அணிக்கு கிடைத்தது. இப்போது அவரால் பந்துவீச முடியாமல் போகும்போது வேறு ஒரு பந்து வீச்சாளர் தான் கலந்திருக்க வேண்டும். பேட்டிங்க்கு இந்திய அணியில் எக்கச்சக்க வீரர்கள் இருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார் விராட் கோலி.
இதுகுறித்து ஹர்திக் பாண்டியா பேசுகையில் “நான் எனது பந்துவீச்சை நிறைவேற்றி வருகிறேன். எப்போது மிகச்சிறப்பாக எனது முழு திறமையையும் எனது பந்து வீச்சில் வெளிப்படுகிறதோ அப்போது சர்வதேச போட்டிகளிலும் வந்துவிடுவேன்” என்று தெரிவித்திருக்கிறார் ஹர்திக் பாண்டியா.