அனுபவம் இல்ல… ஆனா பெரிய திறமைசாலி; ரிஷப் பண்ட்டை இந்த இடத்தில் களமிறக்குங்கள்; அட்வைஸ் கொடுக்கும் முன்னாள் வீரர் !!

ரிஷப் பண்ட் துவக்க வீரராக பேட்டிங் செய்வதற்கு அனைத்து தகுதியும் உள்ளது என்று மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

உலக கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்று பேட்டிங் ஆர்டரில் பல்வேறு விதமான மாற்றங்களை கொண்டு வந்தது, குறிப்பாக இந்திய அணியின் ரெகுலர் துவக்க வீரராக களமிறங்கும் கேஎல் ராகுல் காயம் காரணமாக அணியில் இல்லாததால், அவருக்கு பதில் யாரை துவக்க வீரராக களமிறக்கினால் இந்திய அணிக்கு பலமாக இருக்கும் என்று தீவிரமாக யோசித்த இந்திய அணி., இசான் கிஷன் மற்றும் ருத்ராஜ் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு அளித்தது, ஆனால் அவர்களால் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக செயல்பட முடியவில்லை.

இதனால் இந்திய அணி ரிஷப் பண்டை துவக்க வீரராக களமிறக்கி பரிசோதித்து பார்த்து நல்ல பலன் கிடைத்தது,இருந்தாலும் இவர் லோயர் மிடில் ஆர்டரில் தேவைப்படுவார் என்பதால் சூரியகுமார் யாதவை துவக்க வீரராக களமிறக்கியது, ஆனால் சூரியகுமார் யாதவ் துவக்க வீரராக களமிறக்குவது முட்டாள்தனமான முடிவு என்று கிட்டத்தட்ட அனைவருமே இந்திய அணியை கடுமையாக விமர்சித்தனர்.இதனால் இந்திய அணி இந்த திட்டத்தை கைவிட்டது.

 

தற்போது கே எல் ராகுல் காயத்திலிருந்து மீண்டும் விளையாட துவங்கினாலும் ஒருவேளை அவர் இல்லாத நிலையில் ரிஷப் பண்ட்டையே மீண்டும் துவக்க வீரராக களமிறக்கலாமா என்று இந்தியா அணி தேர்வாளர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் அந்த குழப்பத்தை போக்கும் வகையில்,இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் மஹேலா ஜெயவர்த்தனே., ரிஷப் பண்ட் துவக்க வீரராக செயல்படுவதற்கு அனைத்து தகுதிகளும் உள்ளது என்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து மஹேல ஜெயவர்த்தன தெரிவித்ததாவது, “உள்ளூர் போட்டிகளில் ரிஷப் பண்ட் துவக்க வீரராக செயல்படவில்லை என்றாலும் அவருக்கு துவக்க வீரராக செயல்படும் தகுதி உள்ளது, அவருடைய ஆட்டத்தை சில மாற்றங்களின் மூலம் நம்மால் மாற்ற முடியாது, அவர் இயற்கையாகவே சிறந்த வீரர். இதனால் அவரை துவக்க வீரராக இந்திய அணி பயன்படுத்திக் கொள்ளலாம் ”என்று ஜெயவர்த்தன தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.