டெல்லி அணி கேப்டனாக இருந்த ரிஷாப் பாண்ட் நீக்கம்
டெல்லி ரஞ்சி கோப்பை தொடருக்கு கேப்டனாக இருந்த இளம் விக்கெட் கீப்பரை பேட்ஸ்மேன் ரிஷாப் பாண்ட் நீக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த ரஞ்சி கோப்பை தொடரில் டெல்லி அணியை இறுதி போட்டிவரை அழைத்து சென்ற கேப்டன் ரிஷாப் பாண்ட். ஆனால் டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் நடந்த உள் அரசியலால் அவர் தற்போது நீக்கப்பட்டுள்ளார்.
அவருடன் சேர்ந்து முக்கிய சீனியர் வீரர்களான உன்முக்த் சந்த், மிலிந் குமார், மனன் சர்மா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். மேலும், ரிஷவ் பாண்ட்டிற்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் பிரதீப் சங்வான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆனால், பிரதீப் சங்வான் ரஞ்சி கோப்பை தொடருக்கு கூட தேவர்வாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கடைசியாக குஜராத் அணிக்காக ஐபிஎல் தொடரில் ஆடினார்.
ஆனால் திடீரென டெல்லி அணிக்காக இன்று துவங்கும் மண்டலங்களுக்கு இடையேயான டி20 போட்டியில் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி அணி : பிரதீப் சங்வான் (கேப்டன்), கவுதம் கம்பிர், ரிஷாப் பாண்ட், ஹிமாண்ட் சிங், துருவ் ஷோரே, லலித் யாதவ், சடிஜ் சர்மா, நிதிஷ் ராணா, நவ்தீவ் சைனி, பவான் நெகி, குல்வண்ட் கெஜரொலியா, தேஜஸ் பரோகா, சுபோத் பாட்டி, கவுரவ் குமார்.