வீடியோ : திணறிக்கொண்டிருந்த ரோகித்தை காலி செய்தார் ககிசோ ரபடா

இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கேப் டவுனில் இந்திய நேரப்படி இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கியது. தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் டு பிளிசிஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.
தென்ஆப்பிரிக்கா 73.1 ஓவரில் 286 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. ஸ்டெயின் 16 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார். இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார் நான்கு விக்கெட்டும், அஸ்வின் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக முரளி விஜயும், ஷிகர் தவானும் களமிறங்கினர். விஜய் 1 ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில் பிளாண்டர் பந்தில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான தவான் 16 ரன்களில் ஸ்டெயின் பந்தில், அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதன்பின் கேப்டன் விராட் கோலி களமிறங்கினார். அவரும் 5 ரன்கள் மட்டுமே எடுத்து மார்னே மார்கல் பந்தில் ஆட்டமிழந்தார்.
இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 11 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 28 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 5 ரன்களுடனும், ரோகித் சர்மா ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். இந்திய அணி முதல் இன்னிங்சில் தென்னாப்ரிக்காவை விட இன்னும் 258 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்தது.

இந்நிலையில் இன்றைய ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி ரன்களை எடுக்க மிகவும் திணறியது. குறிப்பாக தென்னாப்பிரிக்க அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபடாவின் பந்தில் ரோகித் சர்மா மிக மோசமாக ஆடினார். மிக கடுமையாக தாக்கிய பந்து வீசிய ரபடாவின் பந்தில் சரியாக லெக் ஃபிபோர் விக்கெட் ஆகிவிட்டார் ரோகித் சர்மா.

அந்த வீடியோ கீழே :

உணவு இடைவேளையின் போது இந்திய அணி 76/4 என்ற நிலையில் தடுமாறி வருகிறது. புஜரா 26 ரன்களுடனும், அஸ்வின் 12 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

Editor:

This website uses cookies.