எனக்கு பிடித்த டாப் 5 பேட்ஸ்மேன்கள் இவர்கள் தான்; ரோஹித் சர்மா ஓபன் டாக் !!

எனக்கு பிடித்த டாப் 5 பேட்ஸ்மேன்கள் இவர்கள் தான்; ரோஹித் சர்மா ஓபன் டாக்

இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய துவக்க வீரர் ரோஹித் ஷர்மா, சிறந்த டாப்-5 இந்திய பேட்ஸ்மேன்களை தேர்வு செய்துள்ளார். அதில் சவுரவ் கங்குலி, சச்சின், ராகுல் திராவிட், விவிஎஸ் லட்சுமண், விரேந்திர சேவாக் ஆகியோர தேர்வு செய்துள்ளார். ஆனால் தற்போதுள்ள வீரர்களில் யாரையும் ரோஹித் தேர்வு செய்யவில்லை.

இது குறித்து ரோஹித் ஷர்மா கூறுகையில்,“நான் இளம் வயதில் இருந்த போது அனைவரையும் போல ஜாம்பவான் சச்சினை பார்த்து தான் வளர்ந்தேன். அதன் பிறகு கடந்த 2002 இல் இங்கிலாந்தில் நடந்த தொடரில் அதிக சதங்கள் அடித்த ராகுல் திராவிட் என்னை பெரிதும் கவர்ந்தார். அந்த தொடர் முழுவதும் திராவிட் சிறப்பான ஆடினார்.

பின் அதிரடி துவக்க வீரர் சேவாக். சேவாக் பேட்டிங் செய்யும் விதமே பவுலரின் பாதி நம்பிக்கையை உடைத்துவிடும். அதேபோல விவிஎஸ் லட்சுமண், மற்றும் தாதா கங்குலியின் ஆட்டம் மிகச்சிறப்பானது. இவர்கள் தான் எனது இந்திய டாப்-5 பேட்ஸ்மேன்கள்” என்றார்.

அதேபோல அடுத்து அடுத்து நடக்கவுள்ள 3 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணிக்காக 2 உலகக்கோப்பை வென்று கொடுப்பதே தனது இலக்கு என்றார். இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ளது.

மேலும் அடுத்த ஆண்டு இந்தியாவில் மற்றொரு டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்படவுள்ளது. அதை தொடர்ந்து 2023இல் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. 2019 இல் இங்கிலாந்தில் நடந்த 50 ஓவர் உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்திய அணி தோல்வியடைந்து வெளியேறியது.

இதுகுறித்து ரோஹித் கூறுகையில்,“அடுத்ததாக 3 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்கள் நடக்கவுள்ளது. அதில் எப்படியாவது 2 கோப்பைகளை வெல்வதே முதல் இலக்கு. அதேபோல மிடில் ஆர்டர் சிக்கலை தீர்ப்பதும். அதில் சிறப்பாக செயல்படும் 5,6,7 ஆவது இடங்களில் களமிறங்கும் வீரர்களுக்கு நீண்ட பயணத்தில் வாய்ப்பு அளிக்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது. இதனால் கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோருக்கு நிச்சயமாக பெரும் தலைவலி காத்திருக்கிறது” என்றார்.

Mohamed:

This website uses cookies.