காயம் காரணமாக இலங்கை அணியுடனான நடப்பு டி.20 தொடரில் இருந்து ருத்துராஜ் கெய்க்வாட் முழுமையாக விலகியுள்ளதாக பிசிசிஐ., அறிவித்துள்ளது.
இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி அசால்டாக அபார வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி.20 போட்டி இன்று மாலை நடைபெற உள்ளது.
இந்தநிலையில், காயம் காரணமாக இலங்கை அணியுடனான முதல் டி.20 போட்டியில் விளையாடாத ருத்துராஜ் கெய்க்வாட், நடப்பு டி.20 தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளதாக பிசிசிஐ., அறிவித்துள்ளது.
காயமடைந்துள்ள ருத்துராஜ் கெய்க்வாட்டை மருத்துவ குழுவினர் கண்கானித்து வருவதாக அறிவித்துள்ள பிசிசிஐ., மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரிலே ருத்துராஜ் கெய்க்வாட் டி.20 தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளதாகவும் பிசிசிஐ., அறிவித்துள்ளது. அதே போல் விலகிய ருத்துராஜ் கெய்க்வாட்டிற்கு பதிலாக மாயன்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் பிசிசிஐ., அறிவித்துள்ளது.
முன்னதாக தீபக் சாஹர் மற்றும் சூர்யகுமார் யாதவும் காயம் காரணமாக இலங்கை அணியுடனான நடப்பு டி.20 தொடரில் இருந்து முழுமையாக விலகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணியுடனான டி.20 தொடருக்கான இந்திய அணி;
ரோஹித் சர்மா, ஸ்ரேயஸ் ஐயர், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா, ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஸ்னோய், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், புவனேஷ்வர் குமார், ஹர்சல் பட்டேல், ஜஸ்ப்ரிட் பும்ராஹ், ஆவேஸ் கான், மாயன்க் அகர்வால்.