தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு டெஸ்டுகளில் இந்திய அணி தோல்வி அடைந்து தொடரையும் இழந்து விட்டது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நியூ வான்டரர்ஸ் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த தொடரில் முதல் முறையாக ‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் கோலி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.
இன்னிங்சில் ‘பொறுமையின் சிகரம்’ நடையை கட்டியதும் இந்திய அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 77 ஓவர்களில் 187 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்க அணி வீரர்களும், இரண்டாவது நாள் ஆட்டத்தில் இந்திய பேட்ஸ்மேன்களை போன்று வீரர்களும் தடுமாறவே செய்தனர். இந்திய பவுலர்களின் தாக்குதல் தீவிரமாக, தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களும் உயிரோட்டமான இந்த ஆடுகளத்தில் தடுமாறினர்.
தென் ஆப்பிரிக்கா அணியில் ஆம்லா மட்டும் அதிகப்பட்சமாக 61 ரன்களை அடித்து இருந்தார். புவனேஷ்வர்குமார் சிறப்பாக செயல்பட்டு மூன்று விக்கெட்களை கைப்பற்றினார். பும்ரா 5 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். பும்ரா 5 விக்கெட்களை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்காவை 200 ரன்களை எட்டவிடாமல் செய்தது. முகமது ஷமி, இஷாந்த் சர்மா தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். முதல் இன்னிங்ஸ் முடிவில் தென் ஆப்பிரிக்கா 194 ரன்களில் அவுட் ஆனது, இந்தியாவைவிட 7 ரன்கள் முன்னிலை பெற்று உள்ளது. இந்திய அணி தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி விளையாடியது.
முடிவில் தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 65.5 ஓவர்களில் 194 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பும்ரா 5 விக்கெட்டுகளும், புவனேஷ்வர்குமார் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். ஒரு இன்னிங்சில் பும்ரா 5 விக்கெட் சாய்ப்பது இதுவே முதல் நிகழ்வாகும். பின்னர் 7 ரன் பின்தங்கிய நிலையில் இந்திய அணி 2-வது இன்னிங்சை ஆடியது. இரண்டாவது இன்னிங்சில் இன்று மூன்றாவது நாள் ஆட்டத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் கவனம் செலுத்தினர், தென் ஆப்பிரிக்காவும் பந்துவீச்சில் தன்னுடைய பலத்தை காட்டியது. இந்திய அணியில் விராட் கோலி (41 ரன்கள்) ரெகானே (48 ரன்கள்) அதிகமான ரன்களை அடித்தனர். புவனேஷ்வர் குமார் மற்றும் முகமது சமி இந்தியாவிற்கு ரன்சேர்க்க முயற்சித்தார்கள்.
80.1 ஓவர்கள் விளையாடிய இந்திய அணி 247 ரன்களில் ஆல் அவுட் ஆனது, இதனையடுத்து தென் ஆப்பிரிக்காவிற்கு 241 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. தென் ஆப்பிரிக்கா இரண்டாவது இன்னிங்சை தொடங்கி விளையாடியது. மார்க்ராம் 4 ரன்களில் வெளியேற்றப்பட்டார். டீன் எல்கர், அம்லா பேட்டிங் செய்து விளையாடினர். தென் ஆப்பிரிக்கா 8.3 ஓவர்களுக்கு ஒருவிக்கெட் இழப்பிற்கு 17 ரன்களுடன் களத்தில் உள்ளது. இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளது.
ஜோகனஸ்பர்க் ஆடுகளத்தின் தன்மை அபாயகரமாக இருப்பதால், போட்டி நிறுத்தப்பட்டு உள்ளது. போட்டியை கைவிடலாமா, வேண்டாமா என்பது குறித்து நடுவர்கள் இரு அணி கேப்டன்களுடன் ஆலோசனை நடைபெறுவதாகவும் தெரிகிறது.