சச்சின், கோலி இருவரிடம் யார் சிறந்த வீரர்?: லாரா ஓப்பன் டாக்

விராட் கோலி ரன் குவிக்க ஆரம்பித்துவிட்டால் அவரை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம் என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா கூறியுள்ளார்.

உலககோப்பை போட்டி தொடர் குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா கூறியதாவது:-

உலக கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு வாய்ப்பு இருக்கிறது. அந்த அணியின் கேப்டன் விராட் கோலி மனிதரே அல்ல. அவர் ஒரு ரன் மிஷின். கோலி ரன் குவிக்க ஆரம்பித்துவிட்டால் அவரை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். அவரது ஆட்ட திறன் 80 மற்றும் 90 ஆண்டுகளில் விளையாடிய வீரர்களை நினைவுப்படுத்துகிறது.

என்னை பொறுத்தவரை சச்சின் தெண்டுல்கர் என்றுமே மிகச்சிறந்த வீரர். அவருடன் கோலியை ஒப்பிட முடியாது. ஆனால் கோலியிடம் சிறப்பான திறமைகள் பல உள்ளன. இளம் வீரர்களுக்கு அவர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருப்பார்.

அவரது தலைமையில் உலககோப்பையில் இந்திய அணி சிறப்பாக செயல்படும் என நம்புகிறேன்.

இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவின் வேகம் அனைத்து அணிகளையும் உற்றுநோக்க வைத்துள்ளது. தற்போது வரை மற்ற பேட்ஸ்மேன்கள் அவரது பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொள்ள வழிகளை தேடி கொண்டிருக்கிறார்கள்.

நான் அவரது பந்துவீச்சை எதிர்கொள்ள நிலை இருந்தால் எதிர்முனையில் இருக்கும் பேட்ஸ்மேனுக்கு விட்டுவிடுவேன்.

தற்போது பும்ரா சிறந்த வேகப்பந்து வீச்சாளராக திகழ்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மற்ற கிரிக்கெட் தொடர்களில் பேட்டிங் செய்வதுபோல எளிதில் உலகக் கோப்பை களத்தில் விளையாட முடியாது என இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை போட்டிக்கான அனைத்து அணிகளும் இங்கிலாந்திற்கு சென்றுவிட்டன. தற்போது பயிற்சிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே உலகக் கோப்பையில் பங்கேற்றுள்ள 10 அணிகளின் கேப்டன்களும், உலகக் கோப்பையுடன் போட்டோ கொடுக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

அந்த நிகழ்ச்சியில் கிரிக்கெட் வல்லுநர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய விராட், “எங்கள் அணிக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. அதேபோன்று இங்கிலாந்து அணியில் ரசிகர்கள் ஆதரவுடன் பலமாக இருக்கிறார்கள். அத்துடன் உலகக் கோப்பையில் விளையாடும் 10 அணிகளுமே சரிக்கு சமமான பலத்துடன் உள்ளார்கள். இந்தத் தொடரில் அனைத்து அணிகளுமே மற்ற அணிகளுடன் ஒரு போட்டியில் மோத வேண்டும். எனவே அது சவாலான ஒன்றாக இருக்கும். இந்த உலகக் கோப்பையின் தனிச்சிறப்பும் அதுதான். மற்ற தொடர்கள் போல உலகக் கோப்பை இருக்காது. இந்தக் களத்தில் 250 ரன்கள் எடுப்பதே கடினமான ஒன்றாகதான் இருக்கும்.

உலகக் கோப்பையில் நான் சிறப்பாக விளையாடுவேன் எனச் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். இங்கு நான் எனக்காக தனிப்பட்ட வகையில் எதுவும் விளையாட முடியாது. எனது திறமை அனைத்து அணியின் பங்களிப்பில் தான் செலுத்துவேன். என்னால் முடிந்த வரை அணிக்காக சிறப்பான பேட்டிங்கை கொடுப்பேன். அனைத்து போட்டிகளிலும் இதுதான் நிலை. இந்தத் தொடரில் ஜோஃப்ரா ஆர்ச்சர் எங்களுக்கு மிகவும் சவாலாக இருப்பார். அவரது பந்துவீச்சை இரண்டு வருடங்களாக கவனித்துள்ளேன். மிகவும் திறமையாக பந்துவீசக்கூடியவர். அதனால் அவரை சாதுர்யமாக இங்கிலாந்து அணி உலகக் கோப்பைக்கு தேர்ந்தெடுத்துவிட்டது. அவரையே அவர்கள் துடுப்புச் சீட்டு போலவும் பயன்படுத்தலாம்” என்றார்.

Sathish Kumar:

This website uses cookies.