இவங்களுக்கு இனியாச்சு நிறைய வாய்ப்பு கொடுக்கனும்; சச்சின் டெண்டுல்கர் !!

 

இவங்களுக்கு இனியாச்சு நிறைய வாய்ப்பு கொடுக்கனும்; சச்சின் டெண்டுல்கர்

ஸ்காட்லாந்து போன்ற குட்டி அணிகளுக்கு நிறைய வாய்ப்பு வழங்க வேண்டும் என ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. இதில் பங்கேற்கும் மொத்த அணிகளின் எண்ணிக்கையை 10 ஆக ஐசிசி குறைத்தது. இதையடுத்து ஸ்காட்லாந்து அணியால் இத்தொடருக்கு தகுதி பெற முடியாமல் போனது.

இந்நிலையில் சமீபத்தில் எடின்பர்க்கில் நடந்த ஒருநாள் போட்டியில் முன்னணி அணியான இங்கிலாந்து அணியை ஸ்காட்லாந்து புரட்டி புரட்டி எடுத்து, 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலக அணிகளுக்கு ஷாக் கொடுத்தது.

இதனால் திடீரென ஷாக் கொடுக்கும் திறமை வாய்ந்த குட்டி அணிகளுக்கு அதிகமாக ஐசிசி.,வாய்ப்பு வழங்க வேண்டும் என இந்திய ஜாம்பவான் சச்சின் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார்.

இதுகுறித்து சச்சின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘கிரிக்கெட் உலக விளையாட்டாக தேவையான அனைந்து கலவைகளும் உள்ளது. ஆப்கானிஸ்தான், அயர்லாந்து, ஸ்காட்லாந்து உள்ளிட்ட திறமை வாய்ந்த அணிகள், அனுபவம் வாய்ந்த அணிகளுக்கு எதிராக விளையாட அதிக வாய்ப்பு வழங்கவேண்டும். திறமைகளை உலகிறகு காட்ட இதுவே மிகச்சிறந்த வழி.’ என அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் திடீரென ஷாக் கொடுக்கும் திறமை வாய்ந்த குட்டி அணிகளுக்கு அதிகமாக ஐசிசி.,வாய்ப்பு வழங்க வேண்டும் என இந்திய ஜாம்பவான் சச்சின் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார்.

இதுகுறித்து சச்சின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘கிரிக்கெட் உலக விளையாட்டாக தேவையான அனைந்து கலவைகளும் உள்ளது. ஆப்கானிஸ்தான், அயர்லாந்து, ஸ்காட்லாந்து உள்ளிட்ட திறமை வாய்ந்த அணிகள், அனுபவம் வாய்ந்த அணிகளுக்கு எதிராக விளையாட அதிக வாய்ப்பு வழங்கவேண்டும். திறமைகளை உலகிறகு காட்ட இதுவே மிகச்சிறந்த வழி.’ என அதில் குறிப்பிட்டுள்ளார்.

Mohamed:

This website uses cookies.