சகாவிற்கு பதில் தினேஷ் கார்த்திக்! பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் இடையேயான டெஸ்ட் போட்டியில் விர்த்திமான் சாஹாவுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் களமிறங்க உள்ளார்.

 

இதனை இன்று பிசிசிஐ தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜுன் 14 ஆம் தேதி பெங்களூருவில் நடைபெறவுள்ளது. டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பரான விக்கெட் கீப்பர் விர்த்திமான் சாஹா காயமடைந்துள்ளதால் தமிழக வீரரும், கொல்கத்தா நைட்ரைடஸ் அணியின் கேப்டனுமான தினேஷ் கார்த்திக் களமிறங்க உள்ளார்.

நடந்து முடிந்த ஐ.பி.எல். தொடரில் மே 25 ஆம் தேதி கொல்கத்தா நைட்ரைடஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற 2வது தகுதிச்சுற்று போட்டியில் சாஹாவுக்கு காயம் ஏற்பட்டது. ஜுன் 14-ல் பெங்களூருவில் நடைபெற இருக்கும் டெஸ்ட் போட்டியில் கலந்துகொள்வது குறித்து சாஹா தரப்பில் இருந்து இன்னும் எந்த பதிலும் வரவில்லை. எம்.எஸ்.கே. பிரசாத் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு, இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் தினேஷ் கார்த்திக்கை இடம்பெறச் செய்ய முயற்சி எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

2007-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் தினேஷ் கார்த்திக் 3 அரை சதங்களை அடித்து அசத்தினார். லாட்ஸ் மைதானத்தில் 60, நாட்டிங்ஹாமில் 77, ஓவல் மைதானத்தில் 91 அடித்து அனைவரையும் சர்ப்ரைஸ் செய்தார். இதுவரை தினேஷ் கார்த்திக் 23 டெஸ்ட்களில் விளையாடி 1000 ரன்கள் எடுத்துள்ளார். அதில் செஞ்சுரி, ஆஃப் செஞ்சுரிகளும் அடங்கும்.

Dinesh Karthik (C) dives for the ball during a training session on the eve of the first day of the third Test against South Africa on January 23, 2018 in Johannesburg. / AFP PHOTO / CHRISTIAAN KOTZE (Photo credit should read CHRISTIAAN KOTZE/AFP/Getty Images)

இந்திய டெஸ்ட் அணியின் துவக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல், தான் விக்கெட் கீப்பராக களமிறங்கத் தயாராக இருப்பதாகவும், பேட்டிங் – கீப்பிங் என்ற இரண்டு பொறுப்புகளையும் எடுத்துக்கொள்ள எப்போதும் தயாராக இருப்பதாகவும், அணிக்கு தேவைப்பட்டால் கீப்பிங் செய்யவும் கடினமான பயிற்சிகளை மேற்கொள்ள தயாராக இருப்பதாகவும் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.

India’s Dinesh Karthik fields a ball during a practice 

இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பர் பொறுப்புக்கு இவ்வளவு போட்டிகள் இருக்கும்போது தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் அணியில் இடம் பிடிப்பாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் நடந்து முடிந்த ஐ.பி.எல் தொடரில் தினேஷ் கார்த்திக்கின் ஃபார்மை பார்த்த கிரிக்கெட் அணி நிர்வாகம் அவருக்கு சாதகமாக இருப்பதாகத் தெரிகிறது. தோனி ஓய்வு பெறுவதாக அறிவிக்கும் வரை ஒருநாள் கிரிக்கெட் அணிக்குள் வேறு யாரும் நுழைய முடியாது என்பது நிதர்ன உண்மை.

Editor:

This website uses cookies.