2017-18 சீசனுக்கு முன்னாள் இந்திய அணியின் விக்கெட்-கீப்பர் பேட்ஸ்மேன் சமீர் டிகே தான் மும்பையின் அணியின் பயிற்சியாளர். மும்பை 2 முறை இறுதி போட்டிக்கு சென்றது, ஒரு முறை கோப்பையை வென்றது, அப்பொழுது சந்திரகாந்த் பண்டிட் என்பவர் பயிற்சியாளராக இருந்தார். இவருடைய பயிற்சி காலம் முடிந்ததால், அந்த பதவிக்கு பிரவின் அம்ரே என்பவரும் விண்ணப்பித்திருந்தார், ஆனால் அவரையும் வீழ்த்தி, பயிற்சியாளர் பதவியில் உட்கார்ந்தார் சமீர் டிகே.
இதற்கு முன் திரிபுரா அணிக்கு பேட்டிங் பயிற்சியாளராக டிகே இருந்தார். 1999-2000 சீசனில் மும்பை அணியின் கேப்டனாக இருந்து கோப்பையையும் வென்றார்.
“மும்பை அணிக்கு பயிற்சியாளராக வருவது சிறந்த மரியாதை தான். இது ஒரு பெரிய பொறுப்பு, மற்றும் நான் என் வேலை நேர்மையான இருக்க வேண்டும். நான் இதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்,” என சமீர் கூறினார்.
முன்னதாக, மும்பை கிரிக்கெட் வாரியம் (MCA) கடந்த மாதம் பயிற்சியாளர் நியமனம் செய்ய இருந்தது ஆனால் ஜூன் 2 வரை நியமனம் தாமதம் ஆகியது. சில மாற்றங்கள் செய்து அனைவரையும் அதிர்ச்சிக்குள் ஆகியது மும்பை கிரிக்கெட் வாரியம். மும்பை ரஞ்சி அணியின் தேர்வாளராக முன்னாள் இந்தியா ஆல்-ரவுண்டர் அஜித் அகர்கரை நியமிக்க பட்டுள்ளார்கள்.
83 முதல்-நிலை மற்றும் 107 லிஸ்ட் A போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆனால், சர்வதேச போட்டிகளில் நீண்ட நாள் விளையாடவில்லை. அவர் இந்தியாவிற்காக 6 டெஸ்ட் மற்றும் 23 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.