கடந்த 2009ல் இருந்து பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக இருந்த சனா மிர் தற்போது கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தற்போது டி20 அணிக்கு கேப்டனாக 26 வயதான பிஸ்மா மரூஃப் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2009ஆம் ஆண்டு பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணிக்கு டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டனாக பதவியேற்றார் சனா மிர். பின்னர் 2016ஆம் ஆண்டு டி20 கேப்டன் பதவியில் இருந்து விளகினார்.
இங்கிலாந்தில் கடந்த ஜூன் மாதம் நடந்த பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டில், பாகிஸ்தான் அணி ஒரு ஆட்டத்தில் கூட வெற்றி பெற முடியாமல் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது.
இதன் எதிரொலியாக பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து சனா மிர் நேற்று அதிரடியாக நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக பிஸ்மா மாரூப் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் முகமது இல்யாஸ் தலைமையிலான தேர்வு குழுவும் கலைக்கப்பட்டுள்ளது.
சனா மிர் வலது கை சுழற்ப்பந்து வீச்சாளர் ஆவர். பாகிஸ்தான் அணிக்காக 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் பந்து வீச்சாலர் சனா மிர் ஆவார். கடந்த சாம்பியன்ஸ் ட்ராபியில் பயிற்சியாளர் சபி அசார் இவர் மீது கடுமையான விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் முன் வைத்தார். சனா மிர் ‘காழ்ப்புணர்ச்சி மிக்கவர்’ எனவும் கூறினார்.
பின்னர் தற்போது அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தால் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சனா மிர் சர்ச்சைப் பேச்சுக்களுக்கும் பெயர் போனவர் 2016ஆம ஆண்டு தேர்வுக்குழுவின் மீதே தனது குற்றைச்சாட்டை மறைமுகமாக வைத்தார். அதாவது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அணியை வைத்து உலகக்கோப்பை எல்லாம் ஆட முடியாது என்வெல்லாம் கூறியுள்ளார்.