ஐசிசி’யை கலாய்த்து தள்ளிய ஸ்காட்லாந்து வீரர்கள்!!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. முதன் மூன்று போட்டிகளில் வென்று இங்கிலாந்து அணி தொடரைக் கைப்பற்றி விட்டது. மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி, பேர்ஸ்டோ (139 ரன்), அலெக்ஸ் ஹாலெஸ் (147), ஜேசன் ராய் (82), மோர்கன் (67) ஆகியோரின் அதிரடியால் 481 ரன்கள் குவித்து புதிய உலக சாதனை படைத்தது.

இந்நிலையில் நான்காவது ஒரு நாள் போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. அந்த அணி யின் தொடக்க வீரர்கள் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அந்த அணி, 8 விக்கெட் இழப் புக்கு 310 ரன்கள் எடுத்தது. கடந்த சில போட்டிகளில் சரியாக விளையாடாமல் இருந்த ஆரோன் பின்ச் அபாரமாக ஆடி, சதமடித்தார். ஷான் மார்ஷூம் சதமடித்து மிரட்டினார். இங்கிலாந்து தரப்பில் டேவிட் வில்லி 4 விக்கெட்டுகளையும் மார்க் வுட், ரஷித் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையடுத்து 311 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை பந்தாடியது. 44.4 ஓவர்களிலேயே நான்கு விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஜேசன் ராய் 83 பந்துகளில் 101 ரன்களும் பேர்ஸ்டோவ் 79 ரன்களும் பட்லர் 29 பந்தில் 54 ரன்களும் எடுத்தனர். ஜேசன் ராய் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

ஐசிசி’யை கலாய்த்த ஸ்காட்லாந்து வீரர் மர்க் வாட்

இங்கிலாந்து அணி அசுர வெகத்தில் அடித்து துவம்சம் செய்துகொண்டிருப்பதை பார்த்த ஐசிசி தnaது ட்விட்டர் பக்கத்தில்

‘இந்த இங்கிலாந்து அணியை யாராவது வெல்ல முடியுமா?’ என ட்வீட் போட்டது
இதனை பார்த்தை ஸ்காட்லாந்து வீரர்கள்,

‘ஒரு 12 நாட்களுக்கு முன்னர்தான் நாங்கள் வென்றோம்’  எனவும்
வெற்றிபெற்ற ஸ்கோர்காரடையும் போட்டு ஐசிசி’யை கலாய்த்தனர். இதற்கு ஐசிசி ரிப்லை செய்யவில்லை.

 

ங்கிலாந்து – ஸ்காட்லாந்து அணிகள் இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி எடின்பர்க்கில் கடந 10ஆம் தேதி நடந்தது. இதில் முதலில் பேட் செய்த குட்டி அணியான ஸ்காட்லாந்து அணி வியப்புக்குரிய வகையில் ஆடியது. ரன் மழை பொழிந்த அந்த அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 371 ரன்கள் குவித்தனர்.
ஒரு நாள் போட்டியில் அந்த அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். மெக்லியோட் 140 ரன்கள் விளாசி (94 பந்து, 16 பந்து, 3 சிக்சர்) களத்தில் இருந்தார். அடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணி 48.5 ஓவர்களில் 365 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் 6 ரன் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அணி ‘திரில்’ வெற்றியை பெற்றது. அந்த அணி இங்கிலாந்தை சாய்ப்பது இதுவே முதல் முறையாகும்.
இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ஜானி பேர்ஸ்டோ 105 ரன்கள் (59 பந்து, 12 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்தார். பேர்ஸ்டோ, ஒரு நாள் போட்டியில் தொடர்ச்சியாக நொறுக்கிய 3-வது சதம் இதுவாகும். ஒரு நாள் கிரிக்கெட்டில் ‘ஹாட்ரிக்’ சதம் அடித்த முதல் இங்கிலாந்து வீரர் இவர் தான்.

Editor:

This website uses cookies.