ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான உலக கோப்பை தொடரின் முக்கியமான போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பயிற்சி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி பாகிஸ்தானை வீழ்த்தி உள்ளது .மேலும் கடந்த சில மாதங்களில் நடைபெற்ற போட்டிகளில் ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
இதனால் அந்த அணியின் கேப்டன் எங்களால் எளிதாக பாகிஸ்தானை வீழ்த்த முடியும் என்று கூறியிருந்தார் ஆப்கன் கேப்டன்.
மேலும் இன்று காலை பாகிஸ்தானின் முன்னாள் வீரர் சோயப் அக்தர் ஒரு தேவையில்லாத சர்ச்சைக்குரிய செய்தியை வெளியிட்டார்.
அதாவது ஆப்கானிஸ்தான் வீரர்கள் அனைவரும் எங்களது நாட்டுக்காரர்கள் எனவும் ,அவர்கள் அனைவரும் பெஷாவர் நகரத்தை சேர்ந்தவர்கள் எனவும் பேசியிருந்தார். இந்நிலையில் இவை அனைத்தையும் ஞாபகம் வைத்து இருந்த ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் மைதானத்தில் துவக்கம் முதலே ஒரு மாதிரியாக பாகிஸ்தான் ரசிகர்களை பார்த்து கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர்.
பின்னர் ஒரு கட்டத்தில் கூச்சல் தாங்க முடியாத சக ரசிகர்கள் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ரசிகர்களை வெளியேற்றுமாறு கேட்டுக் கொண்டனர். இதன் காரணமாக அங்கு இருந்த செக்யூரிட்டிகள் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ரசிகர்களை வெளியேற்றினர். வெளியே செல்லும்போது கடுப்பில் இருந்த ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் சில பாகிஸ்தான் ரசிகர்களை கடுமையாக தாக்கினர் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
நடப்பு உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. ஆப்கானிஸ்தான் அணியில் ஹமீத் சேர்க்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் அணியில் மாற்றம் இல்லை.
பாகிஸ்தான் அணிக்கு 7 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 3 போட்டிகளில் வெற்றியையும், 3 போட்டிகளில் தோல் வியையும் சந்தித்துள்ளது. ஆப்கானிஸ்தானைப் பொறுத்தவரை விளையாடிய 7 போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது. சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இரு அணிகளும் 3 முறை நேருக்கு நேர் சத்தித்த போட்டிகளில் 3 முறையும் பாகிஸ்தானே வென்றுள்ளது. அதனால் இன்றையப் போட்டியில் பாகிஸ்தான், ஆப்கானை எளிதாக வெல்லும் என்று கூறப்படுகிறது.