கிரிக்கெட் விளையாட்டின் சில வெட்கக்கேடான நிகழ்வுகள்

Prev1 of 14
Use your ← → (arrow) keys to browse

கிரிக்கெட் விளையாட்டு ஒரு ஜென்டில் மேன் விளையாட்டு என் ஆண்டாண்டு காலமாக கூறப்படுகிறது. கிரிக்கெட் துவங்கிய காலத்தில் வெள்ளியும் சொள்ளையுமாக மைதானத்திற்குள் வந்து நிறுத்த வைக்கப்பட்டிருக்கும் அமபையரின் சொல் படியும் எழுதி வைக்கப்பட்டிருக்கும் விதிப்படியும் நடக்கும் விளையாட்டு என்பதால் ஜென்டில் மேன் விளையாட்டு எனக் கூட சொல்லப்பட்டிருக்கலாம். இருந்தும் காலம் செல்ல செல்ல தேவையில்லாம் சண்டை போடுதல், திட்டிக் கொள்லுதல், ஒருவரை ஒருவர் சீண்டுதல் அதன் மூலம் கிரிக்கெட் விளையாட்டிற்கு வெட்கக்கேடான பல சமபவங்கள் நடந்துள்ளது. அதனை நாங்கள் இங்கு பட்டியளிட்டுள்ளோம்.

1.வேண்டுமென்றே பந்தை உருட்டி விடுதல்

1981ல் நடண்டஹ் ஆஸ்திரேலியா மற்றும் அதன் பக்கத்து நாடான நியூசிலாந்து அணிகளுக்கு இடையிளான ஒருநாள் போட்டியில் இது நடந்தது. நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து வந்தது, கடைசி பந்து 6 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலையில் இருந்த நியூசிலாந்து அணிக்கு ஆஸ்திரேலிய அணி சிக்சர் அடித்து விடக் கூடாது என நினைத்தது. இதனால்,பந்து வீச்சாளர் மற்றும் தம்பி ட்ரெவர் சேப்பலிடம் கேப்டன் க்ரேக் சேப்பல் பந்தினை அண்டர் ஆர்மில் உருட்டி விடுமாரு கூறினார். இதனால் நியூசிலாந்து அணி தோற்றது. இதனை வைத்து அன்றைய முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் கெய்து மில்லர் கூறியதாவது, ‘நேற்று ஒருநாள் போட்டியை கொலை செய்துவிட்டார்கள், க்ரேக் சேப்பலை அதில் போட்டி புதைக்க வேண்டும்’ எனக் கூறினார்.

Prev1 of 14
Use your ← → (arrow) keys to browse

Editor:

This website uses cookies.