இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி மீது அவரது ஹசின் ஜஹான் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.ஷமிக்கு பல்வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் அவர்களுடன் தனிப்பட்ட முறையில் நேரம் செலவழித்ததாகவும் குற்றஞ்சாட்டினார்.
இதுதொடர்பாக முகநூல் ஆதாரங்களையும் வெளியிட்டார். ஷமி மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் தனக்கு உண்மையில்லாத ஷமி நாட்டுக்கும் உண்மையாக இல்லை. மேலும் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்ட பாகிஸ்தானை சேர்ந்த பெண்ணிடம் பணம் பெற்றார் எனத் தெரிவித்தார்.இதற்கு ஷமி தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன் செய்தியாளர்களை சந்தித்த ஷமி தான் மன உளைச்சலில் இருப்பதாகத் தெரிவித்தார். இந்நிலையில் கடந்த 24ஆம் தேதி ஷமியின் கார் விபத்துக்குள்ளானது.டேராடூனில் இருந்து டெல்லிக்கு தனது காரில் பயணம் செய்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக இவரது கார் விபத்தில் சிக்கியது. இதில் ஷமி காயமடைந்தார். தலையில் அடிப்பட்ட ஷமிக்கு சிகிச்சை அளிக்கபட்டது. தற்போது அவர் தனது வீட்டில் ஓய்வில் உள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஷமியின் மனைவி ஹசின் ஜஹான், “எனது போராட்டங்கள் எல்லாம் அவர் எனக்கு என்ன செய்தாரோ அதற்கு எதிரானதுதான். ஆனால் அவரை உடல் ரீதியாக நான் காயப்படுத்த விரும்பவில்லை. அவர் இனி என்னை ஒரு மனைவியாக விரும்பமாட்டார். அவர் என் கணவர் என்பதால் அவரை நான் காதலிக்கிறேன். நான் என் கணவருடன் தொடர்பு கொள்ள முயற்சி செய்கிறேன். ஆனால் அவர் எனது தொலைபேசி அழைப்பிற்கு பதிலளிக்கவில்லை. அவர் தற்போது எங்கு இருக்கிறார் என்பதை அவரது குடும்ப உறுப்பினர்கள் எனக்கு சொல்லவில்லை. நான் உதவியற்றவளாக இருக்கிறேன்” என்றார்.
ஷமி தன்னை மிரட்டுவதாகவும், நீதிமன்றத்தில் சந்திக்கலாம் எனக் கூறுவதாகவும் அவரது மனைவி ஹசின் ஜஹான் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி மீது அவரது மனைவி ஹசின் ஜஹான் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.ஷமிக்கு பல்வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் அவர்களுடன் தனிப்பட்ட முறையில் நேரம் செலவழித்ததாகவும் குற்றஞ்சாட்டினார். இதையடுத்து இருவருக்கும் இடையிலான கருத்து மோதல் வெடித்து, தேசிய அளவிலான சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒருவரை ஒருவர் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்த நிலையில், விபத்து ஏற்பட்டு ஷமி காயமடைந்தார்.
இந்நிலையில் காயம் ஏற்பட்டுள்ள ஷமியை நேரில் சந்திக்க ஹசின் ஜாஹன் சென்றுள்ளார். ஆனால் ஷமி சந்திக்க மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஹசின், “நான் ஷமியை பார்க்க தான் வந்தேன். அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அவர் என்னை சந்திக்க மறுத்துவிட்டார். அத்துடன் என்னை மிரட்டினார். நீதிமன்றத்தில் உன்னை சந்திக்கிறேன் என்றார். இருப்பினும் அவர் எங்கள் குழந்தையை சந்தித்தார். விளையடினார். ஆனால் என்னை சந்திக்கவில்லை. அவரது அன்னை ஒரு பாதுகாவலர் போல அவருடனே இருந்தார்” என கூறினார்.