சர்ஜீல் கான் 5 ஆண்டுகள் தடை
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போன்று பாகிஸ்தானில் ‘பாகிஸ்தான் சூப்பர் லீக்’ கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் துபாயில் நடைபெற்ற இதன் 2வது சீசனில் ‘இஸ்லாமாபாத் யுனைட்டட்’ அணியில் பங்கேற்று விளையாடிய சர்ஜீல் கான் ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்டது.
பிக்சிங் செய்த போட்டி
பெஷாவர் ஸல்மி அணிக்கு எதிரான போட்டியில் 4 பந்துகளில் ஒரு ரன் மட்டுமே எடுத்து 2 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமலும், அவுட் ஆகி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஆதாரத்துடன் புகார் அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக கடந்த பிப்ரவரி 10ஆம் தேதியே சர்ஜீல் கானை பாகிஸ்தான் அணியில் இருந்து தற்காலிகமாக நீக்கியது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.
அவர் மீதான புகார் குறித்து ஊழல் தடுப்பு பிரிவில் விசாரணை நடந்து வந்த நிலையில் 28 வயதான சர்ஜீல்கான் ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.
சர்ஜீல் கானுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து ஊழல் தடுப்பு தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது. அவர் தற்காலிகமாக நீக்கப்பட்ட தினத்தில் இருந்து இத்தடை அமலுக்கு வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
சூதாட்டப் புகாரில் பாகிஸ்தான் வீரர் சர்ஜீல்கானுக்கு போட்டிகளில் பங்கேற்க 5 ஆண்டு தடை விதித்து. அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக புகார் எழுந்ததையடுத்து சர்ஜீல்கான் கடந்த பிப்ரவரி மாதம் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் 3 பேர் கொண்ட தீர்ப்பாயம் ஒன்றை அமைத்து விசாரணை நடத்தி வந்தது. இதில் சர்ஜீல்கான் மீதான புகார் உறுதி செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாட 5 ஆண்டு தடை விதித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய, சர்ஜீல்கான் முடிவு செய்துள்ளார்