வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இந்திய அணியின் 4வது இடத்திற்கு இவர் தேர்வு!! தினேஷ் கார்த்திக், விஜய் ஷங்கர் வெளியே?

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் இந்தியாவின் நான்காவது இடத்திற்கு ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்படவுள்ளார் என்கின்ற பேச்சு அடிபட்டு வருகிறது.

உலக கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதியோடு வெளியேறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது நடுவரிசை பேட்டிங் சரியாக இல்லாதது தான் என தொடர்ந்து விமர்சனம் வந்தது. அதனால் அடுத்தடுத்து வரும் தொடர்களில் நான்காவது இடத்திற்கு சரியான வீரரை தேடும் பணியில் இந்திய கிரிக்கெட் வாரியம் தீவிரம் காட்டி வருகிறது.

மேலும் தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ் மற்றும் தோனி போன்ற வயது முதிர்ந்த வீரர்களை நீக்கிவிட்டு இளம் வீரர்களை அந்த இடத்திற்கு பயன்படுத்திப் பார்க்கலாம் என பிசிசிஐ முடிவு செய்திருக்கிறது. ஆதலால் ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர் சுப்மன் கில் ஆகியோருக்கு வருகின்ற மேற்கிந்திய அணிக்கு எதிரான தொடரில் வாய்ப்பு கிடைக்கலாம்.

மேலும் இந்திய ‘ஏ’ அணியில் வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கு எதிராக சிறப்பாக ஆடிவரும் ஸ்ரேயாஸ் ஐயர், முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய ஏ அணி வெல்வதற்கு காரணமாகவும் இருந்துள்ளார். 5 போட்டிகள் கொண்ட தொடரில், அடுத்தடுத்து இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக ஆடி தொடரை கைப்பற்ற உதவி உள்ளதால் சர்வதேச இந்திய அணியில் நான்காவது இடத்திற்கு இறங்குவதற்கு அவரை அழைக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தற்போது, இந்தியா ஏ அணி மேற்கிந்திய ஏ அணியை 5 போட்டிகள் கொண்ட தொடரில் வீழ்த்தி 3-0 என கைப்பற்றியுள்ளது.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் ஆட இருக்கும் இந்திய அணி வீரர்கள் பட்டியல் நாளை (ஜூலை 19) அறிவிக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. அதில் ஷ்ரேயாஸ் ஐயர் இடம் பெறுவர் என்றும் தெரிகிறது.

Prabhu Soundar:

This website uses cookies.