6,6,6,6,6,6 : யுவி’யின் பிறந்த நாளில் அவரை நினைவுகூரும் வீடியோ

தனது 19 வயதில் இருந்து இந்திய அணிக்காக ஆடி வரும் யுவராஜ் சிங், ஏன் இன்னும் தாகம் தீராமல் அணியில் இடம் இந்திய பிடிக்க ஓடி வருகிறார்? ஒரு டி20 உலகக்கோப்பை, ஒரு 50 ஓவர் உலகக்கோப்பை வென்றாகிவிட்டது, இன்னும் என்ன ஆசை அவரிடம் உள்ளது என புரியாத புதிராக உள்ளது. ஆனால், அணியில் எப்படியாவது இடம் பிடித்து விட வேண்டும் என்ற போர்குணம் அவரை விட மறுக்கிறது. இதனால் மீண்டும் மீண்டும் அணியில் முட்டி மோதியாவது உடம் பிடிக்க முயற்சி செய்து வருகிறார்.

இதுவரை 40 டெஸ்ட் போட்டிகளில் ஆடி, 33.93 சராசரியில் 1900 ரன் அடித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 9 விக்கெட்டும் எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளைப் போல அல்லாமல் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஒரு வெற்றி வீரனாக இவ்வளவு வருடம் வலம் வந்துகொண்டு இருந்தார். ஆனால், சில உடல் தகுதி காரணங்களால் அணியில் இடம் இல்லாமல் போராடி வருகிறார் யுவராஜ் சிங்.

இப்படி தான் போகிற போக்கில் 2007ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தென்னாப்பிரிக்காவில் நடந்தது. இந்ததொடரில் ஒரு போட்டியில் இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதின, யுவராஜ் சிங் ஒரு பக்கமும் தோனி ஒரு பக்கமும் பேட்டிங் செய்துகொண்டு இருந்தனர்.

பேட்டிங் செய்த யுவராஜ் சிங்கை வழக்கம் போல சீண்டினார் இங்கிலாந்து அணி கேப்டன் ஆன்ட்ரு பிலிண்டாப், இதை பார்த்து டென்ஷன் ஆன நம்ம யுவி, ஸ்டூவர்ட் ப்ராடு வீசிய அடுத்த ஓவரையே கதி கலங்க வைத்தார், அந்த ஓவர் முழுக்க சிக்சர் பறக்க விட்டு 6 பந்துகளுக்கு 6 சிக்சர் அடித்து சாதனை படைத்தார் யுவி.

இதுவரை 304 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளா யுவராஜ் சிங், 36.55 சராசரியில் 8701  ரன்களையும், 38.68 சராசரியில் 11 விக்கெட்டுகளையும் சாயதள்ளார். கடைசியாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்த வருடம் ஜூன் மாதம் ஆடிய  ஒருநாள் போட்டியில் 150 ரன் குவித்தார். அதுவே தற்போது வரை அவர் இந்தியாவிற்காக ஆடிய கடைசி ஒருநாள் போட்டியாக இருந்து வருகிறது.

பின்னர் இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 தொடர்களில் ஆடிவிட்டது. ஒரு தொடரில் கூட யுவராஜ் சிங்கின் பெயர் இடம்பெறவில்லை. யோ-யோ டெஸ்ட் எனப்படும் உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் இந்திய அணியில் இடம் என சொல்லாமல் சொல்லிவிட்டனர் கேப்டன் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஷ்திரி ஆகியோர். இதனை எப்படியாவது க்ளியர் செய்து அணியில் மீண்டுக இடக் பிடிக்கத் தான் போராடி வருகிறார் யுவராஜ் சிங்.

இலங்கை அணியுடனான தொடரில் யுவராஜ் ஐங் இல்லை என்பதை அறிந்து ஏன் என்ன ஆயிற்று எனக்கு எனக் கேட்டதில் தான் தெரிந்தது, யோ-யோ உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் அணியில் இடம் என்று. இதற்காக பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் படிகளை ஏறி இறங்கி வருகிறார். அதன் பின்னர் நடந்த ஆஸ்திரேலியா அணியுடன் தொடருக்கும் யோ-யோ தேர்வில் கலந்து கொண்டு தோல்வி அடைந்தார். மீண்டும் மீண்டும் அணியில் இருந்து புறக்கணிக்கபட எப்படியாவது இந்த தேர்வில் தேர்ச்சி அடைந்து மீண்டும் அணியில் இடம் பிடித்து விட வேண்டும் என ரஞ்சிக் கோப்பை போட்டிகளைக் கூட விட்டு தேசிய கிரிக்கெட் அகாடமியிலேயே கிடந்தார் யுவராஜ் சிங்.

இந்த விடா முயற்சியின் காரணமாக தற்போது இந்த யோ-யோ தேர்வையும் க்ளியர் செய்துள்ளார் யுவராஜ் சிங். ஆனால், நேற்று இலங்கை அணியுடனான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் யோ-யோகா தேர்வை க்ளியர் செய்த யுவராஜ் சிங்கின் பெயர் இடம் பெறவில்லை.

இது குறித்து தேர்வுக்கு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் கூறியதாவது,

யுவராஜ் சிங் இந்த தேர்வை கிளியர் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் இன்னும் சில உள்ளூர் போட்டிகளில் விளையாடி தனது பார்மை நிரூபிக்க வேண்டும் எனக் கூறினார்.

அது எல்லாம் எனக்கு மிக எளிது என ரஞ்சி போட்டியில் களம் இறங்க சென்றுவிட்டார் போர்க்குணம் மிக்க யுவராஜ் சிங்.

Editor:

This website uses cookies.