பந்தை சேதப்புடுத்தியதாக புகார் கூறியதால் இலங்கை வீரர்கள் பீல்டிங் செய்ய மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பந்தை சேதப்படுத்தியதாக புகார்- பீல்டிங் செய்ய மறுத்த இலங்கை வீரர்கள்
வெஸ்ட் இண்டீஸ் – இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் செயின்ட் லூசியாவில் உள்ள கிராஸ் ஐஸ்லேட்டில் உள்ள டேரன் சமி தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 253 ரன்னில் சுருண்டது.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் 2-வது நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் சேர்த்திருந்தது. நேற்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்றது.
3-வது நாள் ஆட்டம் தொடங்குவதற்கு முன், இலங்கை வீரர்கள் அறைக்குச் சென்ற நடுவர்கள் 2-வது நாள் ஆட்டத்தின்போது இலங்கை வீரர்கள் பந்தை சேதப்படுத்தியதாக புகார் கூறினார்கள். அத்துடன் நேற்று பயன்படுத்திய பந்தை இலங்கை வீரர்கள் இன்று பயன்படுத்தக் கூடாது. வேறு பந்தைதான் பயன்படுத்த வேண்டும் என்று கூறினார்கள்.
இதற்கு இலங்கை அணி கேப்டன் சண்டிமல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அத்துடன் இலங்கை வீரர்கள் களம் இறங்கமாட்டார்கள் என்று திட்டவட்டமாக கூறினார்கள். இதனால் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் மற்றும் கள நடுவர்கள் மட்டுமே மைதானத்தில் இருந்தனர்.
பின்னர் போட்டி நடுவர் இலங்கை கேப்டன் மற்றும் பயிற்சியாளரிடம் பேச்சவார்த்தை நடத்தினார்கள். சுமார் ஒன்றரை மணி நேரத்திற்குப் பின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
இலங்கை வீரர்கள் பந்தை மாற்றுவதற்கு சம்மதம் தெரிவித்தனர். அத்துடன் வழக்கை எதிர்கொள்ள தயார் என்றும் கூறினார்கள். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அபராதமாக ஐந்து ரன்கள் கொடுக்கப்பட்டு, பின்னர் ஆட்டம் தொடங்கியது.
இதுதொடர்பாக போட்டி நடுவர் ஜவகல் ஸ்ரீநாத், இலங்கை பயிற்சியாளர் சந்திகா ஹதுருசிங்கா, கேப்டன் தினேஷ் சண்டிமால், மானேஜர் அசங்கா குருசிங்கா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் வேறு வழியின்றி பந்தை மாற்றுவதை ஏற்றுக்கொண்டது இலங்கை அணி. இந்தப் பிரச்னை காரணமாக இரண்டு மணிநேரம் போட்டித் தடைபட்டது. பின்னர் போட்டித் தொடங்கியது. இலங்கை அணிக்கு அபராத மாக 5 ரன்கள், வெஸ்ட் இண்டீஸுக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் வாரியம், ‘எங்கள் வீரர்கள் எந்த தவறும் செய்யவில்லை’ என்று தெரிவித்துள்ளது. ‘இலங்கை வீரர்கள் தவறு செய்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தனது முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணி, 300 ரன்கள் எடுத்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இந்த அணிகளுக்கான இரண்டாவது டெஸ்ட் போட்டி இப்போது நடந்துவருகிறது. முதல் இன்னிங்ஸில் ஆடிய இலங்கை 253 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கேப்டன் தினேஷ் சண்டிமால் 119 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் சொல்லிக்கொள்ளும்படி ஆடவில்லை. வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்துவீச்சாளர் கேப்ரியல் 5 விக்கெட்டுகளையும் ரோச் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
(டோவ்ரிச்)
பின்னர் வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்ஸை தொடங்கியது. 2 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்த நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவடைந்தது. நேற்று மூன்றாம் ஆட்டம் நடந்தது. அந்த அணி 300 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகப்பட்சமாக ஸ்மித் 61 ரன்களும் டோவ்ரிச் 55 ரன்களும் எடுத்தனர். இலங்கை தரப்பில் லஹிரு குமரா 4 விக்கெட்டுகளையும் ரஞ்சிதா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 34 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர் குசால் பெரேராவின் விக்கெட்டை கேப்ரியல் வீழ்த்தினார். இன்று நான்காம் நாள் ஆட்டம் நடக்கிறது.