இந்த நடிகரின் மேல் ஸ்மிருதி மந்தனாவுக்கு ஒரு கண்ணு

பாலிவுட்டிற்கும் கிரிக்கலுக்கும் இடையிலான பிணைப்பு இந்தியாவில் மிகவும் பழையது. இப்போது இந்தியாவின் பெண்கள் அணியின் நட்சத்திரமான ஸ்மிருதி மந்தனா, பாலிவுட் நடிகர் மீது ஒரு கண் வைத்துள்ளார்.

இந்திய மகளிர் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் மீது தான் ஒரு கண் வைத்துள்ளார். மகளிருக்கான கிரிக்கெட் உலகக்கோப்பையில் முதல் இரண்டு போட்டிகளில் பிரமாதமாக விளையாடிய மந்தனா, இந்தியா டுடே நடத்திய விழாவில் இதை தெரிவித்தார்.

மந்தாவின் அணியின் வேதா கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஜூலன் கோஸ்வாமி ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ஒருநாள் போட்டியில் முன்னணி விக்கெட் வீழ்த்திய ஜுலூன், பாலிவுட் நடிகரை விட ஹாலிவுட் நடிகரை விரும்புகிறார் என்று கூறியுள்ளார்.

மறுபுறம் கிருஷ்ணமூர்த்தி, பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மீது கண் உள்ளதாக தெரிவித்தார்.

“பி.சி.சி.ஐ. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக கிரிக்கெட்டை மேம்படுத்தி வருகிறது. கிரிக்கெட் விளையாடுவதை நான் தொடங்கிய போது, ஒன்றுமே இல்லை. ஆனால், இப்போது அடிமட்டத்தில் நிறைய செய்திருக்கிறார்கள்,” என ஜூலான் தெரிவித்தார்.

“மகளிருக்கான IPL நடந்தால் நன்றாக இருக்கும். இதனால், சர்வதேச வீராங்கனைகளுடன் உள்ளூர் வீராங்கனைகள் விளையாடலாம். இதை பற்றி பிசிசிஐ முடிவெடுக்கும் என்று நம்புகிறேன்,” என மந்தனா தெரிவித்தார்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.