ஆஸ்திரேலியாவுக்கு ஆப்பு தான்… இந்த இரண்டு டீமில் ஒரு டீம் தான் சாம்பியன்; முன்னாள் வீரர் ஜக் காலிஸ் உறுதி !!

ஆஸ்திரேலியாவுக்கு ஆப்பு தான்… இந்த இரண்டு டீமில் ஒரு டீம் தான் சாம்பியன்; முன்னாள் வீரர் ஜக் காலிஸ் உறுதி

முன்னாள் தென் ஆப்ரிக்கா வீரரான ஜக் காலிஸ், நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டிக்கு தகுதி பெற வாய்ப்புள்ள அணிகள் குறித்தான தனது கணிப்பை ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.

சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. மொத்தம் 45 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இதுவரை 32 போட்டிகள் நிறைவடைந்துள்ளன.

இதுவரை நடந்து முடிந்துள்ள போட்டிகளின் முடிவில் இந்தியா, தென் ஆப்ரிக்கா ஆகிய இரு அணிகள் தங்களது அரையிறுதி வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டன. எஞ்சியுள்ள இரண்டு இடங்களுக்காக நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஆஃப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகள் போராடி வருகின்றன.

இந்தநிலையில், நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்து பேசிய முன்னாள் தென் ஆப்ரிக்கா வீரரான ஜக் காலிஸ், இறுதி போட்டிக்கு தகுதி பெற வாய்ப்புள்ள அணி குறித்தான தனது கணிப்பையும் ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து ஜக் காலிஸ் பேசுகையில், “என்னை பொறுத்தவரையில் இந்திய அணியும், தென் ஆப்ரிக்கா அணியும் இறுதி போட்டிக்கு தகுதி பெறும் என கருதுகிறேன். சாம்பியன் பட்டம் வெல்ல இந்திய அணிக்கே அதிக வாய்ப்புள்ள என்பதே எனது கணிப்பும், ஆனால் நிச்சயமாக இந்திய அணி மீது அதிக அழுத்தம் இருக்கும். இந்திய அணி பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் வலுவான அணியாக உள்ளது. இருந்தாலும் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறுவதால் இந்திய அணி வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் விளையாடும் என்பதால் தான் இந்திய அணி மீது அதிக அழுத்தம் இருக்கும் என கூறுகிறேன்” என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய ஜக் காலிஸ், “ஆஸ்திரேலிய அணி அதிக ஆபத்தான அணி. இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்காவுக்கும் ஆஸ்திரேலிய அணிக்கு நாக் அவுட் சுற்றில் சவாலான அணியாக இருக்கும். இரு அணிகளும் ஆஸ்திரேலிய அணியை கூடுதல் கவனத்துடன் எதிர்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.

Mohamed:

This website uses cookies.