தென்னாப்பிரிக்க நாட்டின் முதல் தரப் போட்டியில் 191 பந்தில் 300 ரன் அடித்து துவம்சம் செய்து 96 வருட சாதனையை தூசு தட்டியுள்ளார். நவம்பர் 23 ஆம் தேதி நடை பெற்ற மூன்று நாள் போட்டியில் இந்த சாதனையை படைத்துள்ளார் தென்னாப்பிரிக்க நாட்டின் அதிரடி வீரர்.
தென்னாப்பிரிக்க நாட்டின் பார்டர் முதல் தர அணிக்காக ஆடி வருபவர் மார்கோ மராய்ஸ். இவர் கடந்த வியாழக்கிழமை (நவ்.23) பப்பல்லோ பார்க்கில் கிழக்கு மாகாணம் மற்றும் பார்டர் அணிகளுக்கு இடையேயான மூன்று நாள் முதல் தரப் போட்டியில் பார்டர் அணிக்காக விளையாடினார்.
இந்த மூன்று நாள் முதல் தரப் போட்டியில் முதலில் பேட்டிக் செய்த மார்கோ மராய்சின் அணி 84 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திணறி வந்தது. அப்போது 5ஆவது விக்கெட்டிற்கு களம் இறங்கிய மார்கோ, கிழக்கு மாகாண அணியின் பந்து வீச்சை அடித்து துவம்சம் செய்தார்.
அதிரடியாக ஆடிய மார்கோ 68 பந்துகளில் சதம் அடித்தார். சதம் போதவில்லை என தனது அதிரடியை தொடர்ந்து காட்டிய மார்கோ 139 பந்துகளில் 200 ரன்னும், 191 பந்துகளிலும் 300 ரன்னும் விளாசி சாதனை படைத்தார். இந்த ஆட்டத்தில் 35 ஃபோர்களும், 13 சிக்சர்களும் அடங்கும். இவருடன் இறங்கிய வில்லியம்ஸ் என்ற ஆட்டக்காரமும் சதம் அடித்தார், 273 பந்துகளில் 113 ரன் அடித்தார்.
இறுதியாக மார்கோவின் கிழக்கு மாகாண அணி 80 ஓவர்களில் 512 ரன் அடித்து டிக்லர் செய்தது. மேலும், இந்த ஆட்டத்தின் மூலம் முதல் தரப் போட்டிகளில் அடித்த அதிவேக முச்சதத்தை முறியடித்துள்ளார். மேலும், இந்த போட்டி ட்ராவில் முடிந்தது
இதற்கு முன்னர் 1991ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணியின் வீரர் சார்லஸ் மெக்கார்ட்னி இங்கிலாந்தின் நாங்கிங்காம்சைர் அணிக்கு எதிராக் 221 பந்துகளில் முச்சதம் அடித்திருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது இந்த 96 வருட சாதனையை முறியடித்துள்ளார் மார்கோ.