நாமும் தவறு செய்யலாம்; அனுபவத்தில் அட்வைஸ் செய்யும் அஸ்வின் !!

நாமும் தவறு செய்யலாம்; அனுபவத்தில் அட்வைஸ் செய்யும் அஸ்வின்

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி கோப்பையை வென்றது. அடுத்து நடைபெற்று ஒரு நாள் போட்டி தொடரில், முதல் போட்டியை எளிதில் வென்றது. ஆனால் அடுத்த இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது.

இதனால் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் உள்ளது. இந்த டெஸ்ட் போட்டியில் ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்படுவது கடினம். இளம் சுழற்பந்து வீச்சாளர்களான குல்தீப் மற்றும் சாஹல் ஆகியோர் சேர்க்கப்படலாம் எனக்கூறப்பட்டது. இந்நிலையில் டெஸ்ட் தொடரில் விளையாட அஸ்வின் தேர்வு செய்யப்பட்டு, இங்கிலாந்து செல்கிறார்.

Indian Captain Virat Kohli celebrates Aiden Markram of South Africa wicket during the third day of the third Sunfoil Test match between South Africa and India held at the Wanderers Stadium in Johannesburg, South Africa on the 26th January 2018
Photo by: Shaun Roy / BCCI / SPORTZPICS

இதுதொடர்பாக பேசியுள்ள அஸ்வின், “எனக்கு இங்கிலாந்தை நன்றாக தெரியும். நான் அங்கு செல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் கிரிக்கெட் விளையாடுவதற்காக அங்கு செல்வதும் மேலும் மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது அணியில் இருக்கும் கெடுபிடிகளுக்கு மத்தியில் வாய்ப்பு கிடைப்பதே அரிது. இந்நிலையில் நாங்கள் தேர்வு செய்யப்பட்டு இங்கிலாந்து விளையாட செல்கிறோம். அங்கிருக்கும் நிலையை உணர்ந்து, அதற்கேற்றால் போல் ஆட்டத்தை வெளிப்படுத்துவேன். நாம் சிறந்த அணி என்பது நமக்கு தெரியும். அனைத்திலும், அனைவருக்கும் பொறுப்பு இருக்கிறது. சில நேரங்களில் நான் அதிகமாக தகுதி பெற்றதாக நினைக்கிறேன். ஆனால் ஆட்டத்திற்கு என்ன தேவையோ அதை வெளிப்படுத்த வேண்டும். இது ஒரு நீண்ட டெஸ்ட் தொடர். இதில் நாமும் தவறு செய்யலாம், எதிரணியும் தவறு செய்யலாம். எது எப்படியோ ஆட்டம் கடினமானதாக இருக்கும். நான் எதையும் எதிர்பார்க்கவில்லை. நான் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் பெற்ற அனுபவத்தை அங்கு வெளிப்படுத்துவேன்” என்று தெரிவித்துள்ளார்.

Mohamed:

This website uses cookies.