வீடியோ: ரன் ஓடும் போது காயமான பேட்ஸ்மேன், ரன் அவுட் செய்யாத இலங்கை வீரர்! குவியும் பாராட்டு!

எதிரணி வீரரை ரன்-அவுட் செய்யும் வாய்ப்பு கிடைத்தும் ரன் அவுட் செய்யாமல் அனைவரது இதயங்களையம் கவர்ந்துள்ளார் இலங்கை வீரர் உதனா.

தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரில் பார்ல் ராக்ஸ் – நெல்சன் மண்டேலா பே ஜெயன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய பார்ல் ராக்ஸ் அணி 20 ஒவர்கள் முடிவில் 168 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து களமிறங்கி நெல்சன் மண்டேலா அணி இலக்கை விரட்ட தொடங்கியது. 8 பந்துகளுக்கு 24 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் இலங்கை வீரர் உதனா பந்துவீசி கொண்டிருந்தார்.


அப்போது உதனா வீசிய பந்தை மண்டேலா வீரர் குன் அடித்தார். அது சகவீரர் மரியாஸ் கையில் பலமாக தாக்கியது. மரியாஸ் தாக்கிய பந்தை எடுத்த உதனா ரன் அவுட் செய்ய முயன்றார். அப்போது வலியால் துடித்து கொண்டிருந்த மரியாஸ் கிரிஸை விட்டு நீண்ட தூரம் நின்றார். உதனா எளிதாக ரன் அவுட் செய்யலாம் என்றாலும் பந்து பட்டு வலியால் துடித்த வீரரை ரன் அவுட் செய்யாமல் இருந்தார்.

உதானாவின் இந்த செயல் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.இந்த தொடரில் பார்ல் ராக்ஸ் அணி 10 போட்டிகளில் விளையாடி 27 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளது.

 

 

கைல் வெர்ரெய்ன் மற்றும் இசுரு உதனா ஆகியோரின் தாமதமான சிறப்பான ஆட்டம், பார்ல் ராக்ஸின் 20 ஓவர்களின் ஒதுக்கீட்டில் ஐந்து விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்தது.

அதற்கு பதிலளித்த ராக்ஸ், முதல் எட்டு ஓவர்களுக்குள் தொடக்க வீரர்களை இழந்தது.

பார்ல் ராக்ஸ் மொத்தமாக வெற்றிகரமாக பாதுகாத்து நெல்சன் மண்டேலா பே ஜெயிண்ட்ஸை எதிர்த்து 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.

தப்ரைஸ் ஷம்ஸி 25 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார் மற்றும் அவரது எக்கானமி காரணமாக போட்டியின் வீரராக தேர்வு செய்யப்பட்டார்.

வெற்றியின் மூலம், பார்ல் ராக்ஸ் ஆறு ஆட்டங்களில் இருந்து 27 புள்ளிகளுடன் புள்ளிகள் அட்டவணையில் முதலிடம் பிடித்தது.

 

Sathish Kumar:

This website uses cookies.