ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி
ஆசிய கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணியும், ஆஃப்கானிஸ்தான் அணியும் மோதி வருகின்றன. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இலங்கை அணிக்கு நிஷான்கா (3) மற்றும் மெண்டிஸ் (2) ஆகியோர் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து பெரும் ஏமாற்றம் கொடுத்தனர். மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய நிஷான்கா டக் அவுட்டானார்.
இதன்பின் களத்திற்கு வந்த குணதிலகா 17 ரன்களும், நீண்ட நேரம் தாக்குபிடித்த பனுகா ராஜபக்சே 38 ரன்களும் எடுத்தனர். இதன்பின் களமிறங்கிய வீரர்கள் ஆஃப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினாலும், கடைசி நேரத்தில் சமீகா கருணாரத்னே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 37 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் 19.4 ஓவரில் வெறும் 105 ரன்கள் மட்டுமே எடுத்த இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.
ஆஃப்கானிஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக ஃபாரூகி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதே போல் முகமது நபி மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.