ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது போட்டியான இன்றைய போட்டியில் வங்கதேச அணியும், இலங்கை அணியும் மோதுகின்றன.
துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு இரு அணிகளுக்குமே இந்த போட்டி மிக முக்கியமானதாகும். ஆஃப்கானிஸ்தான் அணியிடம் படுதோல்வியடைந்துள்ள இரு அணிகளும் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியும்.
இந்த போட்டிக்கான வங்கதேச அணி மூன்று மாற்றங்களுடன் களமிறங்கியுள்ளது. இந்த போட்டிக்கான வங்கதேச அணியில் முஸ்பிகுர் ரஹீம், மொசாதக் ஹூசைன் மெஹ்தி ஹசன் போன்ற சீனியர் வீரர்கள் அனைவரும் இடம்பெற்றுள்ளனர்.
அதே போல் இந்த போட்டிக்கான இலங்கை அணியில் சாரித் அஸ்லன்கா, வானிது ஹசரங்கா, சம்மீகா கருணாரத்னே போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
வங்கதேச அணியின் ஆடும் லெவன்;
சபீர் ரஹ்மான், மொசாதெக் ஹூசைன், ஷாகிப் அல் ஹசன், முஸ்பிகுர் ரஹீம், அஃபீப் ஹூசைன், மஹமதுல்லாஹ், மொசாதக் ஹூசைன், மெஹ்தி ஹசன், தஸ்கின் அஹமத், மெஹ்தி ஹசன், தஸ்கின் அஹமத், மெஹ்தி ஹசன் மிராஸ், முஸ்தபிசுர் ரஹ்மான், எபாடட் ஹூசைன்.
இலங்கை அணியின் ஆடும் லெவன்;
பதும் நிஷான்கா, குஷால் மெண்டிஸ், சாரித் அஸ்லன்கா, தனுஷ்கா குணதிலகா, பனுகா ராஜபக்ஷே, வானிது ஹசரங்கா, தசுன் ஷனாகா, சம்மீகா கருணாரத்னே, மகேஷ் தீக்ஷன்னா, தில்ஷன் மடுஷனாகா, அசிதா பெர்னாண்டோ.