இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் நுவான் பிரதீப் உலக கோப்பை தொடரில் இருந்து தற்போது விலகியுள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பையில் இலங்கை அணி அதிர்ச்சி தரும் விதமாக இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. ஆடிய 7 லீக் போட்டிகளில் இரண்டடில் வென்றது. மூன்று தோல்விகள் மற்றும் இரண்டு போட்டிகள் மழையின் காரணமாக ரத்து என 6 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் ஏழாம் இடத்தில் இருக்கிறது.
இலங்கை அணி மீதும் இருக்கும் 2 போட்டிகளை வெல்லும் பட்சத்தில் 10 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு இன்னும் இருக்கிறது. இதற்கு மற்ற அணிகளின் ஆதரவு தேவை. அதாவது இங்கிலாந்து அணி அடுத்து வரும் இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவ வேண்டும். அதேபோல் பாகிஸ்தான் அணியும் மீதமிருக்கும் ஒரு போட்டியில் தோல்வியைத் தழுவினால் இது சாத்தியமாகும்.
இந்நிலையில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் பிரதீப் சின்னம்மை நோய் ஏற்பட்டு இலங்கை திரும்பியிருக்கிறார். அவருக்கு பதிலாக உலகக் கோப்பை தொடர் தொழில்நுட்ப அமைப்பின் ஒப்புதலுக்குப் பிறகு, காசுன் ராஜிதா இலங்கை அணியில் இணைகிறார்.
நுவன் பிரதீப் இந்த உலக கோப்பையில் இதுவரை மூன்று போட்டிகளில் மட்டுமே ஆடி 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சின்னம்மை காரணமாக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் ஆடவைக்கவில்லை. தொடரின் துவக்கத்தில் பயிர்ச்சியின்போது, விரலில் எலும்பு முறிவின் காரணமாகவும் அவதிப்பட்டார்.
காசுன் ராஜிதா தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக தொடரில் இலங்கை அணியில் இடம்பெற்றார். இதுவரை அவர் ஆறு ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணி அடுத்து வரும் இரண்டு லீக் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்தியா இரண்டு அணிகளை சந்திக்க இருக்கிறது.