பிங்க் பந்து, பகலிரவு ஆட்டம், இலங்கை தயார்
பிங்க் நிற பந்தில் டெஸ்ட் போட்டிகள் இரவு பகலாக விளையாட ஆஸ்திரேலியா இங்கிலாந்து தென்னாப்பிரிக்க போன்ற அணிகள் சம்மதம் தெரிவித்து விளையாடி வரும் நிலையில் தற்போது இலங்கை கிரிக்கெட் அணி மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும் சேர்ந்து பிங்க்நிற பந்தில் டெஸ்ட் போட்டிகள் இரவு பகல் ஆட்டமாக் ஆடவுள்ளது.
இந்த மாத இறுதியில் ஐக்கிய அமீரகத்தில் நடக்கவுள்ள இரண்டு போட்டிகளில் ஒரு போட்டி பிங்க்நிற பந்தில் விளையாடப்படும் என இரு அணி நிர்வாகமும் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த மாத இறுதியில் 28 ஆம் தேதி துவங்க உள்ள இந்த சுற்றுப்பயணத்தில்,
2 டெஸ்ட் போட்டி 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் என அனைத்து விதமான போட்டிகளையும் இரு அணிகள் விளையாடவுள்ளது.
பிங்க்நிற பந்தில் இந்த வருட ஆசஸ் தொடரும் அரங்கேற இருப்பது குறிப்பிடத்தக்கது.
சென்ற வருடம் தான் சர்வதேச அரங்கில் பிங்க் நிற பந்துகள் டெஸ்ட் போட்டிகளுக்கு பயன் படுத்தப்பட்டது.
இந்தியாவிளும் உள்ளூர் போட்டிகளுக்காக பிங்க்நிற பந்துகள் பயன்படுத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளது.