என்னையா பேசறீங்க… ஸ்ட்ரைக்-ரேட் எல்லாம் சும்மா, போட்டிக்கு என்ன வேணுமோ அதை தான் பண்ணனும் – கேஎல் ராகுல் ஆவேசம்!

லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் புதிய ஜெர்சி வெளியிட்டு விழாவில் பங்கேற்றபோது பேசிய கேஎல் ராகுல், டி20 போட்டிகளின் அணுகுமுறை, ஸ்ட்ரைக்-ரேட் ஆகியவை பற்றி கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 21ஆம் தேதி மே மாதம் 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கடந்த சீசனில் இருந்து பத்து அணிகள் பங்கேற்கின்றன. ஆனால் போட்டிகள் கடந்த சீசனைபோல அல்லாமல், இந்த வருடம் ஒரு போட்டி சொந்த மைதானத்திலும் மற்றொரு போட்டி வெளி மைதானத்திலும் நடக்கிறது.

லக்னோ அணி வருகிற சீசனில் தான் முதல் முறையாக லக்னோவில் உள்ள மைதானத்தில் விளையாடுகிறது. இம்முறை தங்களது ஜெர்சியிலும் நிறம் மற்றும் வடிவமைப்பில் மாற்றங்கள் செய்து களமிறங்குகிறது. லக்னோ அணியின் புதிய ஜெர்சி வெளியீட்டு விழா லக்னோவில் உள்ள அமிட்டி பல்கலைக்கழகத்தில் கடந்த மார்ச் 7ஆம் தேதி நடைபெற்றது. இதில் லக்னோ அணியின் உரிமையாளர் பயிற்சியாளர் ஆலோசகர் மற்றும் கேப்டன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Lucknow super giants new jersey

அப்போது ஜெர்சி வெளியிட்ட பிறகு பேசிய கேஎல் ராகுல், டி20 அணுகுமுறை மற்றும் ஸ்ட்ரைக் ரேட் குறித்து கருத்துக்கள் தெரிவித்தார். இதற்கு முன்னர், ஸ்ட்ரைக் ரேட் பற்றி எழுந்த கேள்விகளுக்கு,  அது முக்கியமற்றது என்ற கருத்தை முன் வைத்திருந்தார். அதற்கு விமர்சனங்களையும் சந்தித்தார். இம்முறையும் அவர் பேசியபோது ஸ்ட்ரைக் ரேட் முக்கியமற்றது  என்கிற கருத்தை மீண்டும் முன்வைத்தார். கேஎல் ராகுல் பேசியதாவது,

“ஸ்ட்ரைக் ரேட் பற்றி கவனிக்க வேண்டிய அவசியம் இல்லை. அது வீணற்ற ஒன்று. ஏனெனில் 140 ரன்களை சேஸ் செய்வதற்கும் 200 ரன்களை சேஸ் செய்வதற்கும் வித்தியாசமான அணுகுமுறை தேவை. தேவையான நேரத்தில் ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடலாமே தவிர, எல்லா நேரங்களிலும் ஸ்ட்ரைக் ரேட் பற்றி கவனம் செலுத்துவது வீணற்றது.” என்ற கருத்தினை தெரிவித்தார்.

இதற்கு வழிமொழிந்து பேசிய லக்னோ அணியின் ஆலோசகர் கௌதம் கம்பீர் கூறியதாவது:

“கேஎல் ராகுல் கூறிய கருத்தை நானும் ஏற்றுக்கொள்கிறேன். அவரைப் போன்ற வீரர் லக்னோ அணிக்கு கிடைத்தது அதிர்ஷ்டம். தெளிவான முடிவுகளை எடுக்கக்கூடிய ஒருவர். இந்த சீசனில் அவருடன் சேர்ந்து பணியாற்ற ஆவலோடு இருக்கிறேன்.” என்றார்.

Mohamed:

This website uses cookies.