உலக கோப்பை கிரிக்கெட் நிறைவடைந்ததும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அறிவித்த கனவு அணியில் இந்தியாவில் இருந்து ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் மட்டுமே இடம் பிடித்திருந்தனர். இந்த கவுரவ அணியில் கேப்டன் விராட் கோலிக்கு இடம் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர், உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களில் இருந்து 11 பேரை தனக்கு பிடித்தமான அணியாக தேர்வு செய்து வெளியிட்டுள்ளார். அவரது கனவு அணியில் 5 இந்திய வீரர்கள் அங்கம் வகிக்கிறார்கள். ஆனால் மூத்த விக்கெட் கீப்பர் டோனி சேர்க்கப்படவில்லை.
அவரைத் தொடர்ந்து தற்போது சச்சினுக்கு முந்தைய ஜாம்பவானான சுனில் கவாஸ்கரும் தனக்கு பிடித்தமான சிறந்த அணியை வெளியிட்டுள்ளார்.
இதன் துவக்க வீரராக ரோஹித் சர்மா மற்றும் டேவிட் வார்னர் ஆகியோரை தேர்வு செய்துள்ளார் இருவரும் 640+ ரன்கள் விளாசி உள்ளது குறிப்பிடத்தக்கது. மூன்றாவது வீரராக இங்கிலாந்தின் ஜோ ரூட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரும் 500 ரன்ங்களுக்கு மேலாக குவித்துள்ளார்.
கேப்டனாக கேன் வில்லியம்சன்-ஐ தேர்வு செய்து உள்ளார் அவர், விராட் கோலிக்கு பதில் இவரைத் தேர்வு செய்ததில் முக்கிய காரணம் இருக்கலாம். ஏனெனில் ஒன்றுமே இல்லாத நியூசிலாந்து அணியை இறுதிப் போட்டி வரை கொண்டு வந்து கிட்டத்தட்ட கோப்பையை வென்றவர் கேன் வில்லியம்சன். (னால் வென்றது இங்கிலாந்து என்பது குறிப்பிடத்தக்கது).
ஆல்-ரவுண்டராக ஷாகிப்-அல்-ஹசன்-ஐ தேர்வு செய்துள்ளார். விக்கெட் கீப்பராக அலெக்ஸ் கேரி மற்றொரு ஆல்-ரவுண்டராக பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இடது கை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் இந்தியாவின் வேகம் ஜஸ்பிரீத் பும்ரா இந்தியாவின் சுழற்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இங்கிலாந்தின் வேகம் சோப்ரா ஆச்சர் ஆகியோர் இவரது அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய வீரர்களில் ரோஹித் சர்மா , ரவீந்திர ஜடேஜா ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோருக்கு மட்டுமே இடம் கொடுத்துள்ளார். முக்கிய வீரர்களான விராட் கோலி, மகேந்திர சிங் தோனி முகமது ஷ்மிஆகியோரை அவர் கண்டு கொள்ளவே இல்லை.
சுனில் கவாஸ்கரின் சிறந்த லெவன்:
- ரோஹித் சர்மா
- டேவிட் வார்னர்
- ஜோ ரூட்
- கேன் வில்லியம்சன் (கேப்டன்)
- ஷாகிப்-அல்-ஹசன்
- அலெக்ஸ் கேரி
- பென் ஸ்டோக்ஸ்
- மிட்செல் ஸ்டார்க்
- ரவீந்திர ஜடேஜா
- ஜோஃப்ரா ஆர்ச்சர்
- ஜஸ்பிரீத் பும்ரா